எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 09, 2013

கட்டுப்படுவதற்குப் பயிற்சி பெறுவோம்



மனிதப் பிறப்பு அல்லாஹ்வின் அருளாகும். இப்பிறப்பின் பருவங்களில் இளமைப் பருவம் பிரதானமானது அது அல்லாஹ்வின் மகத்தான அருள். நாளை மறுமையில் இளமைப் பருவம் என்ற அருளைப் பயன்படுத்திய விதம் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். இளமைப் பருவத்தின் பிரதான கட்டமான கட்டிளமைப் பருவம் (Teen age) பாடசாலையிலேயே கழிகிறது.


இப்பருவம் மீண்டும் மனிதனுக்கு அனுபவிக்கக் கிடைக்காத பருவம். இந்தப் பருவத்தை மாணவர்கள் அருளாகப் பார்ப்பதை விட வேதனையாகவே பார்க்கிறார்கள். வீட்டில் பெற்றோர்கள்,பாடசாலையில் ஆசிரியர்கள்தெருவில் மூத்தவர்கள் என எல்லோருக்கும் கட்டுப்பட வேண்டியுள்ளதே?! விலங்கிடப்பட்ட ஒருவகை அடிமை வாழ்விது. எப்போதுஎப்படி இந்த விலங்குகளை உடைத்துக் கொண்டு சுதந்திர புருஷர்களாக மாறுவது என்றுதான் மாணவர்கள் சிந்திக்கிறார்கள்.

கட்டுப்படுவதை விலங்கு,அடிமைத்துவம் என்று கருதுவது பிழையானது. நன்கு செவிமடுத்து  அறிந்து உணர்ந்து கட்டுப்படுவதில்தான் வாழ்க்கையின் இன்சுவை நிறைந்திருக்கின்றது. செவிமடுப்பதற்கும் கட்டுப்படுவதற்கும் பயிற்சி பெறுகின்ற பாசறைதான் பாடசாலை. பரீட்சையை எதிர்கொள்ள பாடசாலையில் பயிற்சி பெறுகின்றோம். கோட்டவலயமாகாண,தேசிய மட்டங்களில் நடைபெறுகின்ற ஆக்கவிளையாட்டுப் போட்டிகளை எதிர்கொள்ள பாடசாலையில் நாம் பயிற்சி பெறுகின்றோம். ஏன் கட்டுப்படுவதற்கு பயிற்சி பெறக்கூடாது?

ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிகழ்வை எதிர்கொள்ள பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வழிகாட்டல்களை,ஆலோசனைகளைப் பின்பற்றவும் தவறுவதில்லை. தமது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அமைகின்றபோது முரண்படுவதற்கு தவறுவதில்லை. இது ஆபத்தானது. எதிர்கால வாழ்வை இருள்மயமானதாக மாற்றி விடும்.

விருப்பமானவற்றை பின்பற்றுவதற்கு தயாராவது மட்டும் சிறந்த மனப்பாங்காகஎதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் சிறந்த ஆளுமையாக மாறுவதற்கு வழி கோலாது. எமக்கு வெறுப்பாக அமைகின்றவற்றிலும் கட்டுப்படுவது எமக்கு விருப்பமானவற்றில் கட்டுப்படுவதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில்இம்மைமறுமை ஆகியவற்றின் வெற்றி நிர்ணயிக்கப்படுவதும் கட்டுப்பாடு  என்பதைச் சார்ந்திருக்கின்றது என்ற பேருண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு என்பது மனித வாழ்வு முழுவதும் தொடர்கின்ற அம்சமாகும். தனிமனிதகுடும்பசமூக வாழ்வு முழுவதும் நலமாய்வளமாய் அமைவதற்கு கட்டுப்பாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பாடசாலைப் பருவம் கட்டுப்படுவதற்கான பயிற்சியைப் பெறும் பருவமாகும். கட்டுப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது என்பதைப் புரிந்து பெற்றோர்களது ஆசிரியர்களது வழிகாட்டல்களை விருப்பமானவற்றிலும் உள்ளம் வெறுக்கின்றவற்றிலும் ஏற்று கட்டுப்பாடு என்ற கடமையை நிறைவேற்ற பயிற்சி பெறுவோம் வாழ்வின் இனிய சுவைகளை சுவைத்திடுவோம்!

ஆசிரியர்...
aharambook
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்