எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 23, 2017

ஆசிரியர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்

மாணவரின் அப்பியாசக் கொப்பியை நிரப்புவதே ஆசிரியரின் கடமையெனநினைப்பது தவறு

நவீன உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதில் கல்வி பிரதான கருவளமாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகமயமாக்கலின் விரைவான தாக்கம், பல்லினச் சமூகச் சூழல், திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றுக்கிடையேஒவ்வொரு சமூகமும் தமது அபிவிருத்தியை கல்வியினூடாக அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.


ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கல்வியில்முன்னேறினாலே போதும், அக்குடும்பமேமீட்சி பெற்றுவிடும் என்பது வறிய மற்றும்நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகவும் கிராமங்கள்நகரங்களாகவும் விரைவாக மாற்றம்கண்டுவரும் நிலையில் ஒவ்வொருதனிமனிதனும் கற்றால்தான் தனதுவாழ்க்கை முன்னேறும் என்ற சுயநலத்தன்மையை நவீன உலகியல் போக்குகள்நிர்ணயித்து வருகின்றன. எனவே பாடசாலை யில் சேர்க்கப்பட்ட ஒவ்வொருபிள்ளையும் குறித்த தேர்ச்சிகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வ தனைஆசிரியர் ஒவ்வொருவரும் தனித்தும் கூட்டாகவும் உறுதி செய்தல் வேண்டும்.

கற்றல், கற்பித்தல் செய்முறை யைப் பொறுத்தவரையில் பாடசாலை, அதிபர், ஆசிரியர், மாணவர் என பல தரப்பும் இயங்கு நிலையிலேயே உள்ளனர். இதற்கும்மேலாக பெற்றோரது பங்களிப்பும் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இருப்பினும்அடைவு மட்டங்க ளில் சறுக்கி விழும் நிலைமையே மீண்டும் மீண்டும்எதிர்கொள்ளப் பட்டு வருகின்றது. அடைவுமட் டத்திலான ஏற்றத்தாழ்வுகளும்முரண்பாடுகளும் ஓர் சமூகப் பிரச்சினையாகவே தற்காலத்தில் நோக்கப்படல்வேண்டும். பிள்ளைக்குப் பிள்ளை, பாடசாலைக்குப் பாடசாலை, பிரதேசத்திற்குப்பிரதேசம் இவ் வேறுபாடுகளின் தடயங்களும் வேறுபட்டு பரவிக் கிடக்கின்றன.

பள்ளிக்கூடங்களின் அடர்த்தி 6.5 ச. கி. மீற்றருக்கு ஒரு பாடசாலை எனவும்மாணவர் ஆசிரியர் விகிதம் 18 : 1 எனவும் அமைந்த போதும்பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகமை பெறும் அளவிற்குசித்திபெறுபவர்கள் 61 வீதமாகவே காணப்படுவது எமது கல்வியின் தரத்தைஎடைபோடு வதற்கு தக்க சான்றாகும்.

இந்நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து மாணவர் அடைவு மட்டங்களைமேம்படுத்துவதற்கு வகுப்பறை கணிப்பீடுகள் அவசியமாகின்றன. ஏனெனில்கணிப்பீடுகள் அற்ற வகுப்பறைகள் கூரை போடப்படாத கட்டடமாக வும்அதிலுள்ள மாணவர்கள் முறையாக வழி நடாத்தப்படாத வர்களாகவும்அமைந்துவிடுவர்.

பெளதீக் மற்றும் சமூக சூழல், பிள்ளையின் உடல் உள பலம், வளக்கிடைப்பனவு,ஆசிரியர் வாண்மைத்துவம், பெற்றோர் பங்களிப்பு என எத்தனையோநியாயங்களை கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களாக கூறலாம். இருப்பினும் இதுதொடர்பில் வீண் விமர்சனங்களைச் சொல்வதைத் தவிர்த்து எமது பாடசாலைவளங்களை விளைதிறனாக முகாமை செய்து, கற்றலின் அடைவுமட்டத்தைமேம்படுத்துவதற்கான வழிவகைகளை பற்றிச் சிந்திப்பதே கல்விச் சமூகத்தின்உடனடித் தேவையாகும். அந்தவகையில் கணிப்பீடுகளின் அவசியம் பற்றி இங்குநோக்கப்படுகின்றது.

கல்விப் புல ஆய்வுகளின்படி வகுப்பறைக் கணிப்பீடுகள் பிரதான ஊக்கியாகவும்அதன் தாக்கம் நேர் செயற்றிறன் கொண்டதாகவும்அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கற்றல் கற்பித்தலின் நோக்கம்அடையப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வதே கணிப்பீட்டின் பிரதானநோக்கமாகும். இருப்பினும் அதற்கு அப்பாலும் வகுப்பறைக் கணிப்பீடுகளைவலுவூட்டுவதன் மூலம் மாணவர்களில் கணிசமான முன்னேற்றத்தையும்ஏற்படுத்தலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வகுப்பறைக் கணிப்பீடு தெளிவான நோக்கங்களையுடையதாகவும் அவற்றைஅடைவதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பது அவசியமாகும். மேலும் கணிப்பீட்டின் மூலம் பின்வரும் முப்பெரும் பங்களிப்புக்களும்இடம்பெறுதலையும் உறுதி செய்தல் வேண்டும்.

1. கற்றலாக கணிப்பீடு அமைதல் - Assesment as Learning

2. கற்றலுக்காக கணிப்பீடு அமைதல் - Assesment for Learning

3. கற்றலின் கணிப்பீடாக அமைதல் - Assesment of Learning

முதலாவது அம்சம் மாணவரது கற்றல் தேவைகளை இனங்காண் பதனையும்இரண்டாவது அம்சம் கற்றல் விருத்தியை மேம்படுத்து வதனையும் மூன்றாவதுஅம்சம் கணிப்பீட்டுக்கான உத்திகளை அமைப்பதனையும் முதன்மையாகக்கொண்டிருக்கும். இதனால் கணிப்பீட்டின் முழுமையான நோக்கங்களை நிறைவுசெய்யலாம்.

நவீன 5ரி கற்றல் - கற்பித்தல் முறையில் கணிப்பீடு என்பது பாடம்ஆரம்பித்ததிலிருந்து முடிவடையும் வரை வகுப்பறையில் எந்த நேரமும்நடைபெறலாம். இது ஒரு தொடர் செயற்பாடாகும். இருப்பினும் பாடமுடிவில்வழங்கப்படும் எழுத்துப் பயிற்சியானது பொதுப் பரீட்சைக்கானவழிகாட்டியாகவும் அமைகின்றமையும் கவனிக்கத்தக்கது. எனவே அத்தகையமதிப்பீட்டு வினாக்கள் முறையாக வழங்கப்படுவதை ஒவ்வொரு பாடஆசிரியரும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

எந்தவொரு வினாவும் மாணவனது உடல், உள வயதுக்கு ஏற்றவாறுபொருத்தமான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தகுதியற்ற வினாக்கள்மாணவர்களது கற்றலை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக எதிர்விளைவுகளைஏற்படுத்திவிடும். மேலும் மாணவர்களை வகுப்பறையிலிருந்து தூரமாக்கியும்விடும். எனவே அவர்களது கற்பனைக்கும் எதிர்பார்த்தலுக்கும்விருந்தளிப்பதாகவும் வினாக்கள் அமைக்கப்படல் வேண்டும். காலப் போக்கில்படிப்படியாக முன்னேறுவதற்கு ஏற்றவாறு சாரம் கட்டுவதாகவும் அமைதல்வேண்டும்.

எனவே மாணவர்கள் என்ன அறிந்திருக்கின்றார்கள். எதனைச்செய்யக்கூடியவர்களாக உள்ளனர் என்பது தொடர்பாக தகவல்களைச் சேகரித்துவியாக்கியானம் செய்வதற்கு குறிப்பான வினாக்களைப் பயன்படுத்த வேண்டும். இது வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் அமையலாம். எழுத்து மூலமானவினாக்கள் தொடர்பில் மாணவரது பயிற்சிக் கொப்பிகள் ஒவ்வொன்றாகத்தனித்தனியே பார்வையிடப்பட்டு திருத்தப்படல் வேண்டும். பயிற்சிக்கொப்பிகளில் பிழை (x) அடையாளம் இடுவதைத் தவிர்த்து மாணவர்களைஊக்குவிக்கக்கூடியதாக சரியான விடைகளை நோக்கி அவர்களை நகர்த்தவேண்டும். மாணவரது குறைகளை குறிப்பாகவும் தனித்தனியேயும் ஆலோசனைவழங்கி வழிகாட்டவும் வேண்டும்.

கற்றலில் சுயவிருப்பினை ஏற்படுத்துவதாகவும் சுயவியாக்கியானம் செய்துதனது செயலாற்றுகையின் மீது பிரதிபலிப்பதாகவும் கணிப்பீடு அமைதல்வேண்டும். குழு முறைக் கற்றலின் போது சகபாடிகளின் செயலாற்றுகையின்மீதும் பிரதிபலித்து அதனை தனது நிலையுடன் ஒப்பிடவும் சந்தர்ப்பத்தைஏற்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். இதனை வகுப்பறையில் ஆசிரியர்உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

அறிவைக் கடத்துபவர் என்ற நிலையிலிருந்து தனது வகிபங்குகளை விரிவாக்கல்செய்து பல்வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பவராகவும் ஆசிரியர்மாறவேண்டும். கணிப்பீடானது நெட்டுருத்தன்மையுடைய ஒருசெயல்முறையல்ல. சாதாரண சூழலில் சுயாதீனமாக அது மேற்கொள்ளப்படல்வேண்டும். காலத்துக்குப் பொருத்தமாக எமது வீடுகளையும் வாகனங்களையும்நவீனமாக மாற்றியமைப்பது போன்று கணிப்பீட்டின் உள்ளடக்கம் மற்றும்முறைகளையும் இற்றைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். வகுப்பறைக்கணிப்பீடுகள் சிலபோது பத்தாம் பசலித்தனமாகவும் காலங்கடந்தவையாகவும்அமைந்திருப்பது ஆச்சரியக் குறியாகவே தோன்றுகின்றது.

எத்தனை ஆசிரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட போதும் மாற்றங்களை உள்வாங்காதுபாரம்பரியமான விரிவுரையையும் குறிப்புக்களை (னிotலீs) வழங்கிமாணவர்களது கொப்பிகளை நிரப்புவதுமான ஆசிரியர்கள் இன்னும் சமூகத்தில்மிகையாகவே உள்ளனர். மாணவர்களைக் கொண்டு பாடப்புத்தகங்களை எழுதச்செய்யும் ஓர் செய்முறையாகவே இது நோக்கப்படல் வேண்டும். இச்செய்முறைஆசிரியர் சமூகத்திலிருந்து விரைவாக களையப்படுவது அவசியமாகும்.

குறித்த கற்றலின் மீதான கணிப்பீட்டினை மேற்கொள்ளும் போது அதற்கானஅடிப்படைகளைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஆசிரியர்அறிவுரைப்பு வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் வகுப்பறைக்கணிப்பீடானது நோக்கத்தின் அடிப்படையிலும் கலைத்திட்டம் மற்றும்கற்பித்தலுடன் இணைந்தும் திட்டமிடப்படுகின்ற விடயமாகும். கணிப்பீடுதனித்துவமானதாயினும் கலைத்திட்டம், கற்றல், கற்பித்தல் என்பவற்றுடன்ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் அமைகின்றது. எனவேஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளை புத்தக அலுமாரிகளை அலங்கரிக்கும்அலங்காரப் பொருட்களாக வைக்கப்படுவதைத் தவிர்த்து ஆசிரியர்களின்பாவனைக்கு வழங்கப்படுவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

முறையான கணிப்பீடானது பரிகாரங்களை அடையாளப்படுத் துவதாக அமையும்என்பது கல்வியியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறே கற்றல் - கற்பித்தலின் விளைதிறன் கற்றல் இடர்களுக்கான பரிகாரங்களைகாண்பதிலேயே தங்கியுள்ளது. மேலும் வகுப்பறையில் நடைபெறும் உற்பத்திச்செயன்முறையானது பெளதீகப் பொருட்களுடன் தொடர்புடைய தல்ல. மாறாகஅது மானிட அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் சமூகத் திறன் சார் விருத்தியுடன்தொடர்புடையது எனவே பரிகாரங்கள் உடனடியாகக் காணப்படல் வேண்டும். இதற்காக கணிப்பீடுகளை வகுப்பறைகளில் முறையாகப் பயன்படுத்துவதைஒவ்வொரு ஆசிரியரும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

எம்.எல்.
முஹம்மத் லாபிர்...-
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்