எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 23, 2017

கற்பித்தல் பணி சிறப்புற ஆசிரியருக்கு உதவும் வாண்மைத்துவம்

‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என்பது சான்றோர் மொழி. அதற்கொப்ப கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள்.


சீர்சிறப்புமிக்க உயர் விழுமியமுள்ள நன்மனப்பான்மை கொண்ட மாணவர்களை வழி நடாத்தும் உயர்ரக தொழிலாக கருதப்படுகின்ற ஆசிரியத்துவம் நெட்டுருக்கல்வி முறை இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மிகவும் உயர்வானவர்களாக கருதப்பட்டனர்.

கற்கின்றவர்கள் சிஷ்யர்களாகவும் அதாவது குருவின் அனைத்து செயற்பாடுகளையும் பின்பற்றியவாறு குரு சிஷ்யன், தின்னைப்பள்ளியாகி உருவகிக்கப்பட்ட கதை சொல்லும் காலம் மலையேறி தற்கால கல்விமுறையில் ஆசிரியர்கள் ஒரு சிறப்பான வழிகாட்டிகளாக நவீன கல்வித்துவத்தின் அடிப்படையில் வாண்மை மிக்கவர்களாக மிளிர்கின்றனர்.
ஒரு சமூகமானது அதனது பண்பாட்டைக் காப்பாற்றி பின்னரான சந்ததிக்குக் கொடுக்கும் ஒரு கருவியேதான் கல்வி என்று கல்விச் சிந்தனையாளரான சேர் பேர்சிநண் (ஷிir ஜிலீrலீynun)என்பவரது கூற்றாகும்.
இந்தக்கருவியை எழுத்தாகவும், பண்பாட்டுக்குரித்தான வடிவங்களாகவும், ஆக்க உருவாக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்து உருகி பிறருக்கு ஒளியூட்டுகின்ற ஆசிரியர்கள் தான் இதனை திறமையாக செய்ய முடியும். எனவேதான் ஆசிரியர் பணியானது கெளரவத்துக்கும் மரியாதைக்கு முரியதாக காணப்படுகின்றமையினால் பண்டைத் தமிழர் குருவாக ஆசிரியரை வழிபட்டு அவரிடமிருந்து அறிவைப் பெறமுயன்றனர். உண்மையில் ‘ஆசிரியர்’ என்பதன் கருத்து ‘குற்றமற்றவர்’ என்று பொருள்படும்.

அவ்வாறான ஆசிரியத்துவம் சிறப்பானதாக அமைய வாண்மை விருத்தியில் காலூன்றி செயற்படுதல் மாணவரின் எழுச்சிக்கு கால்கோலாய் அமையுமல்லவா?

ஆசிரியர் தொழில் வாண்மையானது விசேட பயிற்சிகளின் ஊடாக சமூகத்தில் உயர்மட்ட அந்தஸ்துள்ள ஒரு பணியாக கருதப்படுகிறது. இவ்வாறான பணியினை வேறொருவரால் பிரதியீடு செய்வது என்பது முடியாத காரியமாகும். ஆசிரியர்களைப் போன்றே வைத்தியர்கள்.

வழக்கறிஞர்கள் போன்றோர்களையும் உதாரணமாக கூறலாம். எனவேதான் ஆசிரியர் சேவையில் இவ்வாண்மைத்துவமானது சேவை செய்யும் எண்ணத்துடன் அதில் தங்கியிருத்தல், அதிக தகுதியினை அதிகரித்துக் கொள்ளுதல், தனது வாண்மையின் மூலம் தெளிவான வெளியீடுகளை பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு பண்புகளையும் இதில் காணக்கூடியதாகவும் உள்ளது.

வழிகாட்டிகளாக வலம்வருகின்ற இன்றைய ஆசிரியர்கள் சமுதாயத்தின் மத்தியில் மதிப்புடையவராக, புனிதத்துவம் மிக்கவராக காணப்பட வேண்டும் என சமூகம் நினைக்கிறது.

காரணம் சமுதாயத்தின் வழிகாட்டிகளாக இவ்வுலகில் அவதரித்த புனிதர்கள் அனைவரும் சக்திமிக்க ஆசான்களாகவே வந்துதித்து மக்களின் நேர்வழிக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்த வரலாறுகளை பார்க்கின்றோம்.

இஸ்லாமிய மார்க்கத்தை உலகிற்கு பரப்பிய முஹம்மது நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறைவனிடமிருந்து முதலாவதாக வந்த இறை கட்டளையோ ‘நபியே நீர் ஓதுவீராக’ அதாவது கற்பீராக படிப்பீராக என்பதாக அமைந்திருந்தது.

இவ்விடத்தில் இறைவன் ஆசானாகவும், நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் மாணவராகவும் இருந்து கற்றல்- கற்பித்தல் அங்கு நடைபெறுகிறது.
இறைவன் கற்பிக்கிறான். எனவே தான் எழுத்தறிவித்தவன் இறைவனாவான். ஆசிரியரும் எண், எழுத்து, நல்லொழுக்க செயற்பாடுகளையும் எதிர்காலத்தில் சமூகத்தின் நற்பிரஜையானவர்களை உருவாக்கும் நோக்குடன் பாடசாலைகளில் கற்பிக்கின்றமையினால் உலகத்தில் நடமாடும், நம்முன்னே காணும் படைப்பாளியாகவே மாணவர்களும் சமுதாயமும் பார்க்கின்றனர்.

எனவே தான் ஆசிரியரானவர் மாணவர்களை கவரும் விதத்தில் சிறந்த வாண்மை விருத்தியுடையவராக காணப்படுகின்றபோதுதான் கற்கும் மாணவரும் நன்னடத்தையுள்ள அறிவு, திறன் மனப்பாங்கு போன்ற நடத்தைசார் விருத்தியுடையவர்களாக உருவாகி நாட்டின் எதிர்கால நற்பிரஜைகளை, உலகின் சவாலை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றமுற வைக்கின்ற சக்தி மிக்கதோர் பணிதனை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆசிரியர் வாண்மையானது அபிவிருத்தியை அடைந்து கொள்ளும் பொருட்டு கற்றல், கற்பித்தல் போன்ற செயற்பாடுகளைச் சிறப்பான முறையில் அமுல்படுத்தி மாணவர்களுக்கு பாடரீதியாக கற்பித்தல் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கான அடித்தளமாக அமைகின்ற மதிப்பீடு மற்றும் கணிப்பீடுகளில் பங்குபற்றி அதன் மூலம் உள்வாரி மற்றும் வெளிவாரி பரீட்சைகளில் தோற்றம் பெறவைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதும், மாணவர்களின் கற்றல் தோற்றங்களை உருவகித்து தயார் செய்து சகலரும் பயன்படக்கூடியவாறான கற்றற் தோற்றப்பாடுகளை ஏற்படுத்துவதும் இவ்வாண்மையாளரான ஆசிரியர்களின் செயற்பாடுகளாகும்.

21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி அனைத்துலக ஆணைக்குழுவின் தலைவர் ஜெகிஸ் டெலோர்ஸ் கூறிய கூற்றை யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டிருந்த ஒரு புதிய கருத்துள்ள விடயமாக இது கொள்ளப்படுகிறது.

அதாவது ஆசிரியர் பாத்திரத்தை எதிர் காலத்தில் செம்மையாக்குவதற்கான ஒரு முன்மொழிதலாக கொள்ளப்பட்டது எனலாம். அதாவது நபர்களையும் சமூகத்தையும் 21ம் நூற்றாண்டுக்காகத் தயாரிக்கையில் நான்கு விடயங்கள் தொடர்பாக கல்வியானது ஆக்கபூர்வமான பொறுப்புமிக்கதான பணிதனை நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

இவ்விதமான விளை, வினைதிறன்களையும் ஏற்படுத்தக் கூடியவாறானதும் பிள்ளையின் வாழ்க்கையில் மாற்றங்களை, புத்தாக்கங்களை, புகுத்தி புதிய கண்ணோட்டத்தில் பள்ளி வரும் மாணவனை ஆசிரியர் அணுகும் விதத்திலேதான் அவனது எதிர்காலம் தங்கியுள்ளது. ஒரு நற்பிரஜையை உருவாக்கிய உன்னத பணி அவ்விடத்தில் நிறைவேறுகிறது.

இன்று நாடளாவிய ரீதியில் சுமார் இரண்டு இலட்சத்தையும் தாண்டியுள்ள (212, 683-2008 இல்) ஆசிரியர் தொகை பணியினை சுமார் 9, 662 (2008 இல்) க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அங்குள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைச் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டு முகங்கொடுத்துள்ள நிலையில் உருவாகிவரும் நவீன அறிவுப் பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு ஆசிரியரும் தனது பாங்கின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதல் அவசியமாகும்.

ஏனெனில் ஒருகாலத்தில் ஆசிரியரின் வகிபங்கானது அறிவைக் கடத்துபவர் ஹிransசீissionஎன்றும் அதன் பின்னர் அறிவைக் கொண்டு வந்து வழங்குபவர் (ஹிransaணீtion) என்றும் தற்காலத்தில் உருமாற்றம் செய்பவர் (ஹிrans பிorசீation)என்பதாக மாற்றமடைந்து காணப்படுகிறது.

எனவே, இன்றைய நிலையில் ஆசிரியர் தமது வாண்மையை மேம்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாக மாறும் நிலைக்கு w என்பதுதான் உண்மையாகும்.

யுனஸ்கோவின் ஆசிரியர் சாசனத்தின்படி ‘கற்பித்தல் ஒரு தொழிலாகக் கருதப்படுகிறது. ஒரு வகையில் சமூகத்திற்கான பணியாகவும் கொள்ளலாம். அதன் நிமித்தம் மிகுந்த முயற்சியோடு இடையறாது மேற்கொள்ளும் கற்றல் வாயிலாகப் பேணும் விசேட அறிவு மற்றும் திறமைகள் என்பன ஆசிரியரில் காணப்படல் வேண்டும். மேலும் தனது பொறுப்பினை தாங்குவதாக அவர் உணர்தல் வேண்டும்.

என்பதுடன் தனது வாண்மை யைப் பற்றி ஆசிரியரானவர் புதிய நோக்கு, தெளிவான சிந்தனை, சேவைமனப்பாங்கு போன்றவை களை தன்னகத்தே கொண்ட மைந்தவர்கள் ஈடுபடக்கூடிய தோர்பணி ஆசிரியர் பணியாகும் என்பதையே ‘யுனெஸ்கோவின் ஆசிரியர் சாசனம்’ எடுத்தியம்புகிறது. ஆசிரியரின் பணியானது மாணவர்களிடம் மறைந்துள்ள ஆற்றல்கள், திறமைகள் போன்றவைகளை வெளிக் கொணர வைப்பதேயாகும்.

மட்டுமன்றி ஆசிரியர் மாண வர்களுக்கு முன்னால் ஒரு கவிஞராக, விஞ்ஞானியாக, தந்தை யாக, தாயாக, வழிகாட்டியாக, ஆய்வாளராக மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறும், பாடசாலைச் சுற்றாடலுக்கேற்றவாறும் தமது பாத்திரத்தை மாற்றி மாணாக்கருக்கு உதவும் செயலினை செய்வதே வாண்மையாளரின் பணியாகவும் கொள்ளப்படுகிறது.

இலங்கையின் கல்வியமைப்பில் ஆசிரியர்களது நியமனம் ஒருகாலத்தில் பாடசாலை மாணவர்களிலிருந்துதான் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களை சட்டாம்பிள்ளைகள் என அழைத்தனர். சட்டாம்பிள்ளைக ளான ஆசிரியர்களுக்கு அப்போது நல்ல மதிப்பு இருந்தது. ஏனெ னில் இவர்கள் பாடசாலைகளின் தலைமைப் பொறுப்பை பெற்று பாடசாலைகளை மிகவும் அடக்கியாள்பவர்களாக இருந்தனர்.

ஆனால் இவர்களால் ஆசிரியரின் சிறப்பு பணியான வாண்மைத்துவத்தில் மற்றும் அறிவார்ந்த விடயங்களில் எவ்வித ஈடுபாடுகளும் காட்டாது இருந்தனர்.

வருடாந்த சம்பள உயர்ச்சிக்கான பரீட்சைகளில் இவர்களால் தோற்றமுடியாது தடை ஏற்பட்டதனால் இந்நடைமுறை 1929ம் ஆண்டு முற்றாக கைவிடப்பட்டது. உண்மையில் ஆசிரியர் வாண்மை விருத்தியில் தன்னை முற்றாக ஈடுபடுத்தி மாணவர்களின் அறிவு, திறன் மனப்போக்கு விடயங்களில் கரிசனை கொண்டு அறிந்துகொள்வதற்கு தனது வாண்மை விருத்தி உதவும் என்பதேயாகும்.

பாடசாலைகளினூடாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் உச்சப்பயனை அடைதல் வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்புமாகும்.

ஆசிரியர்கள் தமது மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறைகொண்டு செயலாற்றுதல் நன்று. ‘அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் பிள்ளைகளின் கற்றலானது சிறப்படைய அல்லது குறைந்து நலிவடைந்து செல்ல மிக முக்கிய காரணியாக அமைவது ஆசிரியர்களின் மனப்பாங்குகளே’ என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும்.

எனவே மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த ஆசிரியர் சதா கற்பவராகவும், நவீன கற்பித்தல் நுட்பங்களை அறிந்து செயற்படுபவராகவும், மாணவர் நலனில் அக்கறையுள்ளவராகவும் காணப்படல் வேண்டும்.

நல்லாசிரியர் என்பவர் அதிபரோடு ஒத்துழைப்பவர், சக ஆசிரியர்களோடு சிறப்பான தொடர்புகளை கொண்டவர், மாணவர்களின் ஆலோசகர், கற்பிக்கும் விடயங்களை தினமும் ஆயத்தப்படுத்தி வருபவர், தனது தொழில்சார் திறன்களில் மேம்படுத்திக் காணப்படுபவர், பாடசாலை சமூகத் தொடர்பினை நல்ல முறையில் பேணுபவர் பாடத்திற்கு மேலதிகமாகவும் கற்பித்தல் போன்ற பல நற்பண்புகள் நல்லாசிரியரிடம் நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆசிரியர் எப்போதும் தனது வாண்மை விருத்தியில் அபிவிருத்தியை ஏற்படுத்த விளையவேண்டும்.

ஆசிரியர்கள் தமது தொழிற் தகைமைகளை உயர்த்தி தத்துவார்த்த ரீதியான உயர் தகைமைகளை பெறுவதற்கு தம்மை தயார்படுத்தல் வேண்டும்.

அந்த வகையில் கல்விமானி கி.ரி.னீபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு தனது துறையில் பட்டதாரியாகவும் பட்டப்பின் பட்டதாரியாகவும் தன்னையுயர்த்துவதுடன் அதுபோன்ற கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தக் கூடியவாறான நவீன கற்றல்- கற்பித்தல் துறைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வாண்மைத்துவத்தில் சிறப்புமிக்க ஆசிரியர்களாக உயர்வடைந்து செல்ல முயல்தல் வேண்டும்.

ஆசிரியர் பணி ஒரு சேவையாகவும், தொழிலாகவும் கருதி தனது பணியில் உயர தம்மை ஈடுபடுத்த வேண்டும். வெறுமனே இடமாற்றம கிடைத்தால் ஏற்றுக்கொள்வதில்லை. வீட்டுக்கு அண்மையில் பாடசாலை வேண்டும்.

தனது உரிமைகளில் முனைப்புடன் ஈடுபாடுகாட்ட முயற்சிக்கும் அதேவேளை தவறான வழிகாட்டல்களை பின்பற்றுதல், ஒழுக்காற்று நடவடிக்கைக்குள்ளாகும் ஆசிரியருக்கு சார்பாக போர்க்கொடி தூக்குதல். தமது மேலதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக தூசித்தல் போன்ற பல்வேறு வீணான நடவடிக்கைகளில் காலத்தைக் கழிக்கின்ற சில ஆசிரியர்களும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான வீணற்ற செயற்பாடுகளிலிருந்து ஆசிரியர்கள் விடுபட்டு வாண்மை விருத்தியில் தன்னை முழுமையாக ஈடுபாடுகாட்டி மாணவர்களின் வினைதிறனின் விளைவுகளை நாளைய சந்ததிக்காய் தன்னில் ஈடுபாடு காட்டுகின்றபோது இறைவனினது திருப்பொருத்தமும் எம்மை நாடிவரும். பிறந்தோம், வாழ்ந்தோம், ஆசிரியனாக பணியாற்றினோம் என்றில்லாமல் எமது சமூகத்தின், நாட்டின் உயர்வுக்காய் எம்மை நாடிவரும் குழந்தைகளை வீணடிக்காது சிறப்பான சிற்பிகளை உருவாக்க எமது வாண்மையை விருத்தியுறச் செய்வோம்.

ஆசிரியர் எஸ்.எல். மன்சூர் அட்டாளைச்சேனை

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்