எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: August 17, 2017

இலங்கையின் கல்வி வரலாறு (பகுதி-1)


  • - கி.மு. 3ம் நூற்றாண்டில் அர்கத் மகிந்தர் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியமை அப்போதைய சிங்கள இராச்சியத்தில் நிகழ்நத சிறப்பாகக் குறிப்பிடத்ததொரு சம்பவமாகும். இவ்வகையில் பௌத்தத்தின் வரவையடுத்து விகாரைகள் பௌத்த மதகுருமாருக்குத் தானமாக வழங்கப்பட்டன. இவ்விகாரைகள் பிக்குமார்கள் வதிவிடங்களாகவும், கல்வி பயிலும் இடங்களாகவும் படிப்படியாக வளர்ந்து பௌத்தக் கல்வி அளிக்கும் நிலையங்களாக மாறின.

  • - பௌத்த கல்வியின் பிரதான நோக்கம் பௌத்த சமயத்தை வளர்ச்சி அடையச் செய்வதனுடாக நல்லொழுக்க நற்பண்புகளை வளர்த்தலும் சமய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுமாகும். அதாவது, இலங்கை சமுதாயத்தை படிப்படியாக பௌத்த கலாச்சாரத்திற்கு வழிப்படுத்தி அரசர்கள், தலைவர்கள், விவசாயிகள், கைவினை முற்றியோர், தொழிலாளர் முதலியோரை வழிகாட்டலுமாகக் காணப்பட்டது. இந்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தேரவாத, மகாயன சிந்தனைகளின் மூலம் கல்வி புகட்டப்பட்டது.

  • - பௌத்த கல்விக் கலைத்திட்டத்தில்; சுயமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இங்கு பிக்குகட்கும், பொதுமக்களுக்கும் என்று பாடங்கள் வகுக்கப்பட்டன. நிக்காய சங்கராவில் கூறிய பொது மக்களுக்கான சில பாடங்கள் பிக்குகள் கற்கத் தடை விதிக்கப்பட்டது. பாடவிதானமானது 18 சாஷ்திரங்கள் 64 கலைப் பாடங்களை உள்ளடக்கி இருந்தாக பூஜாவலியின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

  • - ஆரம்பக் கல்வியளித்த சிற்றூர் பள்ளிகளில் வாசிப்பு, எழுத்து, என்னும் பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும் அளிக்கப்பட்டது. உதாரணமாக வடங்கவி பொத்த என்னும் செய்யுள் தொகுதி  கண்டி இராச்சிய சிற்றூர் பள்ளிகளில் பயில்விக்கப்பட்டது. அங்கு போதித்த வாசிப்பு நூல்களாவன நம்பொத்த, மகுல்லக்குன, கணதேவிஹெல்லா, பத்தினிஹெல்ல, புத்த கஜ்ஜாய, சகஸ்கடய எழுத்துப் பயிற்சிக்கு கோயிற் பள்ளியின் கலைத்திட்டத்திலே ஏட்டுக்கல்விக்குரிய பாடங்களும் தொழில் கல்விக்குரிய பாடங்களும் இடம் பெற்றன. இதில் பௌத்த சமயப் போதனை இன்றியமையாத அங்கமாக இடம்பெற்றது. மேலும், சோதிடம், மருத்துவம் போன்ற உயர் பாடங்களும், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழித்துறைப்பாடங்களும் அங்கு முக்கியத்துவம் பெற்றன.

  • - உச்சநிலைக் கல்வி வழங்கிய பிரிவேனாக்களின் விரிந்த, பரந்த கலைத்திட்டதிலே அடங்கிய பாடங்களாவன சமயத்துறை அறிவு, வேதங்கள், சமய ஒப்பீட்டுக் கல்வி, சிங்கள, பாளி, சமஸ்கிரத மொழிகள், வரலாறு, இலக்கணம், தர்க்கம் போன்ற பண்பாட்டுதுறையறிவுப் பாடங்களுடன் உயர் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், மருத்துவம், கட்டடக் கலை, ஓவியம் போன்றனவும் இடம் பெற்றன.

  • - பௌத்த கல்வி அமைப்பின் கற்றல், கற்பித்தல் முறைகளாக வாய்மொழி மரபு முறைகள்; பயன்படுத்தப்பட்டன. இவற்றிக்கு உதாரணங்களாக வாய்மொழிப் பாரம்பரியத்தின் அங்கங்களான கலந்துரையாடல், சொல்லாடல், ஓதல், உச்சாடனம், விவாதம், சொற்போர், வினாவிடை, ஒப்புவித்தல் போன்ற முறைகள் அனுசரிக்கப்பட்டன. இதன் பயனாகப் பொருள் அறியாத மனனம் அல்லது உருப் போடுதல் நேரிட்டது.

  • - இக்கல்வி முறைமையின் ஆசிரியர்களின் பெரும்பாலானோர் பௌத்த துறவியர் ஆவர். காலப்போக்கிலே துறவியர்; அல்லாத கல்விமான்களும் பிரிவேனாக்களிள் ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர். 

தொடரும்..............
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்