எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 01, 2017

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரம்)– மாதிரிப் பத்திரம் Model Paper

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரம்)– மாதிரிப் பத்திரம்
General Certificate of Education (Adv. Level) – Model Paper
இஸ்லாமிய நாகரிகம்  -  11
Islamic Civilization – 11
அறிவுறுத்தல்கள்:
·         பகுதி 1 இலிருந்து இரண்டு வினாக்களையும், பகுதி 11 இலிருந்து மூன்று வினாக்களையும் தெரிவு செய்து எல்லாமாகஐந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
·         ஒவ்வொரு வினாவுக்கும் 20 புள்ளிகள் வழங்கப்படும்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
01(1) அல்குர்ஆனில் உள்ள நாஸிக்-மன்ஸூக்.
-மொழிக்கருத்து:நீக்குதல், அகற்றுதல், பிரதி செய்தல்
- பரிபாஷைக் கருத்து: “ஷரீஅத் சட்ட்மொன்றை பிறிதொரு ஷரீஅத் சட்டமொன்றினால் மாற்றுவதைக் குறிக்கும்”
- நாஸிக்: மாற்றிய புதிய சட்டம் ;  மன்சூக்:  மாற்றப்பட்ட ஆரம்பத்திலிருந்த பழைய சட்டம்
- “ஏதேனு ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கடிக்கச் செய்தால், அதைப்போன்ற ஒன்றை அல்லது
   அதைவிடச் சிறந்த ஒன்றை நாம் கொண்டுவருவோம்.  (2 : 106)
- நஸ்ஹ் இடம்பெறும் / பெறா அம்சங்கள்; நஸ்ஹின் பிரிவுகள்:  நஸ்ஹின் வகை;  நஸ்ஹ் இடம்பெற்றுள்ள விதம்


(11) அல்குர்ஆனில் காணப்படுகின்ற  முஹ்கம்,  முதஷாபிஹாத் பற்றி  விபரிக்க.
* முஹ்கம்:
- மொழிக்கருத்து: இரு விடயங்களை(சத்தியம்-அசத்தியம், உண்மை-பொய்) வேறுபடுத்திக் காட்டல்
- பிரயோகம்: தெளிவாக விளங்கக் கூடிய, வேறு ஆதாரங்கள் தேவைப்படாத, கருத்து முரண்பாடற்ற சட்ட வசனங்கள்
- Eg: 1. ஹலால், ஹராம் தொடர்பாக வரும் சனங்கள் (அல்மாஇதா: 03
         2. இறைவனது கட்டளைகள், அவன் விதியாக்கியவற்றைக் கூறும் வசனங்கள் (அல்மாஇதா: 35)
         3. இறைவனது வாக்களிப்புக்கள், தண்டனைகள் (அந்நபா: 31)
         4. நாஸிக் வகையைச் சேர்ந்த மாற்றும் வசனங்கள்  (அல்பகரா: 187)

*முதஷாபிஹாத்:
- மொழிக்கருத்து: ஒன்றை ஒன்று (கருத்தில், தோற்றத்தில், சுவையில், யதார்த்தத்தில்) ஒத்திருத்தல்
- பிரயோகம்: பல கருத்துக்களுக்கு இடம்பாடான, கருத்து மயக்கமான, தன்னில் பூரண தெளிவற்றதும் பிறிதோர் ஆதாரத்தில்
   தங்கி இருப்பதுமான, அல்லாஹ் மாத்திரமே அறிந்த விடயங்கள்
  Eg: 1. அல்லாஹ்வின் பண்புகளைக் கூறும் வசனங்கள்
        2. அல்ஹுரூஃபுல் முகத்தஆத் / முகஸ்ஸராத் – தனித்த எழுத்துக்கள்
        3. மன்ஸூக் வகையைச் சார்ந்த மாற்றப்பட்ட வசனங்கள் (அல்பகரா: 183)
        4. மறுமை நிகழ்வு, நரக வேதனைகள் பற்றிக் கூறும் வசனங்கள் (அல் இன்ஃபிதார்: 1 – 4)




(111)  அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றை விளக்குக.

- யமாமா யுத்தத்தில் ஹாபிழ்கள் கொல்லப்படல்
- இதனால் அல்குர் ஆன் மறைந்துவிடுமோ என அஞ்சிய உமர் (ரழி), கலீபா அபூபக்ரிடம் குர்ஆனைத் தொகுக்குமாறு
   வேண்டியமை
- ஆரம்பத்தில் கலீபா தயங்கினாலும் தொகுப்பதன் அவசியத்தை உணர்ந்து அதற்கு இணங்குதல்
- இப்பணிக்காக ஸைத் பின் ஸாபித் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அமைத்தல்
- எழுதியவை மனனத்துடன் சரிபார்க்கப்பட்டுத் தொகுக்கப்படல்

(1v) அல்குர்ஆன் குறிப்பிடும் குடும்ப வாழ்க்கைக்கான போதனைகளைத் தருக.

- சோடி சோடியாகப் படைத்துக் குடும்ப வாழ்க்கைக்கான எண்ணத்தை ஏற்படுத்தி  அவர்களிடம் அன்பையையும்
  நேசத்தையும் ஏற்படுத்தி இறுக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டல் (30:21)
- நெருக்கமான உறவோடு ஒருவருக்கொருவர் மானத்தைக் காப்பாதற்கான வலியுறுத்தல்
- திருமணத்தை வலியுறுத்தல் (24:32)
- குடும்பத் தலைமைத்துவத்தையும் பொறுப்புக்களையும்  ஆணுக்கு வழங்கல்
- கணவன் – மனைவியின் பொறுப்புக்கள், கடமைகள்
- பிள்ளைகள் – பெற்றார் பொறுப்புக்கள், கடமைகள் (ஸூரா லுக்மான்)

(v) கல்வித் துறையின் வளர்ச்சிக்கு அல்குர்ஆன் எவ்வாறான பங்களிப்பைச் செய்துள்ளது என்பதை
     உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுக.

- அல்குர்ஆனின் ஆரம்ப வார்த்தையே கல்விக்கு அடிப்படையான படித்தல், சிந்தித்தல், ஆய்தல் தொடர்பாகப் பேசியமை
- அறிவோடு தொடர்பான “இல்ம்”, “அல்பாப்”, “அன்னுஹா”, “அல்-அக்ல்”, “அல்பிக்ர்”, “அல்ஹிக்மா”, “அல்புர்ஹான்”
   முதலாம் வார்த்தைகளை அல்குர் ஆன் பல்வேறு இடங்களில் பிரயோகித்துள்ளமை
- சிதிக்கவில்லையா? பார்க்கவில்லையா? கேட்கவில்லையா? ஆராய்ந்து பார்க்கக் கூடாதா? என்றெல்லாம் வினாக்கள்
   தொடுத்து, அவ்வாறு செயற்படாதோரை கால் நடைகளைப் போன்றவர்கள் என்றும் அவற்றைவிட மோசமானவர்கள்
   என்றும் கடிந்து கொள்கின்றமை
- அறிவியல் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்தமையும், பிற்பட்ட காலங்களில் இதனடிப்படையில் முஸ்லிம் சமூகம்
   சிறப்புப் பெற்றிருந்தமையும்.

02.   (1) தஜ்தீத் பற்றிய எண்ணக் கருவை விளக்குக.
  
  - மொழிக்கருத்து: புதுப்பித்தல், புனர் நிர்மாணம் செய்தல், மறுமலர்ச்சி, சீர்திருத்தம், - சமூகப் புனரமைப்புப் பணி
   - பரிபாஷைக் கருத்து:
    * இஸ்லாத்திலிருந்து அதற்கு மாற்றமான அனைத்தையும் நீக்கி, அதனை அதன் தூய உருவில் எடுத்துக்    காட்டுவதும்,  
      அதன் வழியில் செழித்தோங்கச் செய்வதும்
    * நபியவர்கள் கால்த்தில் நிலவிய தூய இஸ்லாத்தை, அதன் தூய வடிவில் நவீன சூழலில் மீண்டும் நிலை   நாட்டு
      வதற்காக எடுக்கப்படும் முயற்சி
    * நபியவகளது காலத்தில் காணப்பட்ட தூய இஸ்லாம், பல்வேறு காரணங்களால் மாசடைகின்றபோது அதனை   மீண்டும்
      அதன் (அசல்) ஆரம்ப நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சி
    * வீழ்ச்சியடைந்துள்ள இஸ்லாமிய நாகரிகத்தை மீண்டும் எழுச்சியடையச் செய்வதற்கான ஒட்டுமொத்த சீர்திருத்தப் பணி.
     (ஆன்மீக, குடும்ப, சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, இரணுவ, பண்பாடு)

 -  உமைய கலீபா 2ம் உமர் காலம் முதல் தொடர்தேர்ச்சியாக இடம்பெற்று வரும் பணி; மறுமை வரை    நிலைத்திருக்க   
    வேண்டிய பணி
 -  இப்பணி தனிப்பட்ட வகையிலும் கூட்டாகவும் (பர்தீ / ஜமாஈ) இடம்பெற்று வருகின்றமை
 -  இஸ்லாம் என்றும் அதன் தூய வடிவில் நிலைத்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பணியாக தஜ்தீத் என்ற  
    இப்பணி அமைந்துள்ளமை

(11) இத்துறையின் வரலாற்று வளர்ச்சியை விளக்குக.

உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) – முஜத்தித் காமில்அவர்களது சீர்திருத்தப்பணிகள்
ஹஸனுல் பஸரீஸஈத் பின் ஸுபைர்முஹம்மத் பின் ஸீரீன் போன்றோரின் உரைகளும் உபதேசங்களும்
ஸைத் பின் அலி இப்னு ஹுஸைன்இமாம் அபூ ஹனீபா (ரஹ்அவர்களும் அவர்களது மாணவர்களும் பிக்ஹ்
   துறையில் ஆற்றிய பணிகள்
இமாம் அஷ் அரீமாத்ரூதீ , இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) போன்றோரின் அகீதாத் துறைச் சீர்திருத்தம்
கிரேக்கரோமபாரசீக சிந்தனைத் தாக்கங்களில் இருந்து சமூகத்தைக் காக்க இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
   மேற்கொண்ட பணிகள்
- ஆன்மீக ரீதியான சீர்திருத்தத்தில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) யின் பங்கு
-  இராணுவசமயசிந்தனா ரீதியான  தாக்கங்களில் இருந்து தாம் வாழ்ந்த காலத்துச்  சமூகத்தைச்  சீர்திருத்திய
    இமாம்களான  இப்னு தைமியா (ரஹ்),  இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)
- 18ம் நூற்றாண்டில் முஹம்மத் அப்துஹூஜமாலுத்தீன் ஆப்கானீபதீஉஸ்ஸமான் நூர்ஸீ-துருக்கிஉமர்
   முக்தார்ஷகீப் அர்ஸலான்-லெபனான்அல்லாமா இக்பால் போன்றோரின் பணிகள்
19ம் 20ம்நூற்றாண்டுகளின் இறுதியில் சீதிருத்தப் பணியில் பங்காற்றிய இஸ்லாமிய இயக்கங்கள்  வரை.

(111) 19ம் நூற்றாண்டின் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய இஸ்லாமிய சீர்திருத்த வாதிகளுள் (மௌலானா இல்யாஸ் (ரஹ்), மௌலானா மௌதூதி (ரஹ்) அஷ்-ஷஹீத் ஹஸனுல் பன்னா)  ஒருவரின் சீர்திருத்தப்பணி பற்றி விளக்குக.

- முஸ்லிம் சமூகம் ஆயுத ரீதியானதும் சிந்தனா ரீதியானதுமான படையெடுப்புக்கு உட்பட்டிருந்த ஒரு காலப்பிரிவில் 
  இவற்றை வெற்றி கொள்ளப் பாரிய சீர்திருத்தப் பணியொன்றின் அவசியம் உணரப்படல்
- இமாம் ஹஸனுல் பன்னா  தனது 10வது வயதில் ஜமிய்யதுல் அதபுல் அக்லாகிய்யா, ஜம் இய்யது மனில் முஹர்ரமாத்  
  போன்ற அமைப்புக்களை உருவாக்கல்
- உயர் கல்வியை முடித்த பின்னர் முதல் தர ஆசிரியராகப் பணி புரிதலும், தனது கருத்துக்களை முன்வைத்து 1928ல் ஆறு
  பேரோடு இணைந்து பைஅத்தைப் பெற்று இக்வானுல் முஸ்லிமூன் என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தலும்
- ஆன்மீகம், அறிவு, பண்பாடு, அரசியல், சமூக சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்டு இயக்க ஊழியர்களுக்கு அவற்றுக்குரிய
   பயிற்சிகளை வழங்கலும், இதன் விளைவாக,சமகால உலகில் முதல்தர  முஜத்தித்கள் உருவாதலும்
அரபு – இஸ்ரேல் யுத்தத்தில் பங்களித்தது முதல் இன்று வரை இஸ்லாமிய ஆட்சியின் புனரமைப்புக்கு வழிகாட்டல்களை
   வழங்கி வருதல் (அரபு வசந்தம்)

(1v)  இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கருதப்படுகின்ற முக்கிய   துறைகள்  யாவை?
* ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் (ஷிர்க், பித்அத், மூடப் பழக்க வழக்கங்கள்)
* முஆமலாத் துறையில் ஊடுருவியுள்ள இஸ்லாமிய சிந்தனைக்கு மாற்றமான அம்சங்கள் (அளவை நிறுவை மோசடி, வட்டி)
* தக்லீத் சிந்தனையின் தாக்கத்தில்  இருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவித்து, நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின்
   வழியில்   தீர்வு காண வழிப்படுத்தல்
* சமூக வாழ்வு: (பிற கலாசாரம் மற்றும் இஸ்லாத்துக்கு மாற்றமான சிந்தனைகள், நடைமுறைகளில் இருந்தும் சமூகத்தை
    விடுவித்தல்)
* அரசியல்: (சம-கால அரசியல் முறைமைகளில் காணப்படுகின்ற இஸ்லாமிய வழிமுறைக்கு மாற்றமான அம்சங்களுக்குப்
   பகரமாக இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளை நிலை நிறுத்த முயற்சித்தல்)
* கல்வி மற்றும்   நவீன ஊடக, இலத்திரனியல்,தொழிநுட்பத் துறைகளைப் புறக்கணித்து ஆன்மீகத் துறையில்  மாத்திரம் 
   காட்டப்பட்டு வரும் அலாதிஆர்வம்

(v) இலங்கையில் இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஓர் இயக்கத்தின்பணிகள் பற்றி விளக்குக.
- நம் நாட்டில் தற்சமயம் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தஃவா அமைப்பொன்றின் தோற்றம்,
  பணிகள் / சேவைகள் பற்றிய விளக்கம்.

03   (1)  ஜாஹிலிய்யாக்காலத்து திருமண முறைகள் பற்றி விளக்குக

1. நிகாஹ் அஸ்ஸஹீஹ்
- இஸ்லாம் வலியுறுத்துவது போன்ற (மஹர், வலி) நடைமுறை – அரபு உயர் குழாத்தினரிடம் இந்நடைமுறை காணப்பட்டது
-  நபி (ஸல்) அவர்களின் பெற்றோரும் இம்முறை மூலமே திருமணம் செய்தார்கள்

2. னிகாஹ் அல் இஸ்திப்Bழாஃ
- தனது மனைவிக்குத் தான் விரும்பும் கல்வி, வீரம் போன்ற சிறப்பியல்புகளைக் கொண்ட ஒருவருடன் தொடர்பு கொண்டு கருத்தரிக்க அனுமதித்தல்
- பிறக்கும் குழந்தை குறித்த சிறப்பியல்புகளைப்பெற வேண்டுமென்பது இதன் நோக்கமாகும்

3. நிகாஹ் அத்தவாதிஃ
ஒரு பெண் தான் விரும்பும் ஏறத்தாள பத்துப் பேருடன் உறவு கொண்டு குழந்தை பிறந்த பின்னர், அவள் அவர்களுள் தான் விரும்பும் ஒருவரைச் சுட்டிக்காட்டி, பிறந்த குழந்தையின் தந்தை அவரே எனப் பிரகடனப்படுத்தல்

4. நிகாஹ் அல் பஃகாயா
- ஒரு பெண் தன்னிடம் வரும் சகலரோடும் உறவு கொள்வாள்.
குழந்தை கிடைத்த பின் அனைவரையும் வரவழைத்து, அவர்களில் குழந்தையின் முகச் சாயல் கொண்டவரைத் தந்தையாகப் பிரகடனப்படுத்துவாள்

·         அங்கு காணப்பட்ட வேறு திருமண முறைகள்
1, நிகாஹ் அல் முத்ஆ  2. பலதார மணம்  3. பலபதி முறை  4. வீட்டின் மேல் சிவப்புக் கொடி பறக்கவிடல் 5. நிகாஹ் அஷ்-ஷிஃகார்( இருவர் பரஸ்பரம் ஒருவர் மற்றவருக்குத் தன் சகோதரியை அல்லது மகளைக் கட்டித் தருவதாக ஒப்பந்தம் செய்தல்

 (11) ஜாஹிலிய்யாக் காலத்துச் சமய நிலை பற்றி விளக்குக
-       முஷ்ரிக்குகள், ஸாபிBஈன்கள், மஜூஸிகள், யஹூதிகள், நஸாராக்கள், ஹனீஃப்கள் முதலாம் சமயக் குழுக்கள் காணப்பட்டமை
-       விக்கிரக வணக்கத்தின் மையமாக கஃபா திகழ்ந்தமையும் 360க்கும் மேற்பட்ட சிலைகள் அங்கு காணப்பட்டமையும்
கஃபாவை நிவானமாக வலம் வந்தமையும்
-       சிலை வனங்கிகளான முஷ் ரிக்குகளே அதிகம் இருந்தமையும், அம்ர் பின் லுஹை ஸிரியாவில் இருந்து ஹுபல் என்ற சிலையைக் கொண்டுவந்து சிலை வணக்கத்தை  அறிமுகம் செய்தமையும்
-       ஹுபல் தலைமைச் சிலையாக இருந்தமையும்;  லாத். மனாஹ்ட், உஸ்ஸா, வத்Dது, ஸுவாஉ, யஃகூஸ், யஊக், நஸ்ர் போன்ற வேறு கடவுள்களை வணங்கியமையும்
-       கஃபாவை கண்ணியப்படுத்தல், சிலைகளுக்கு முன் தலை வைத்து வணங்குதல், அவற்றிடம் தஞ்சமடைதல், அவற்றைச் சுற்றி வலம் வரல், கால் நடை-விவசாய விளைச்சலில் நேர்ச்சை வைத்தல், படையல்களைப் படைத்தல் போன்ற வணக்க முறைகள் காணப்பட்டமை

 (111) முஸ்லிம் சமூகம் ஜாஹிலிய்யா சமூகத்திலிருந்து வேறுபடும் பாங்கினை எடுத்துக் காட்டுக.
- முஸ்லிம் சமூகம் கொள்கை  வழிச் சமூகம்; ஜா. சமூகம் கோத்திர வழிச் சமூகம்
- பாவத்திலிருந்து விடுபடுவதை இலக்காகக் கொண்டது ; பாவத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை
- பொதுத் தலைமைத்துவக் கட்டுப்பாடு ; கோத்திரத் தலைமைக்கு  (அஸபிBய்யா)  முக்கியத்துவம்
- சீரான திருமண ஒழுங்கும் கடும்பக் கட்டமைப்பும் காணப்படல் ; இது அங்கு சிதைவுற்றிருக்கும்
- நீதி, நியாயம், நேர்மை காணப்படும் ; சுய நலம், சுரண்டல் மிகைத்துக் காணப்படல்
- பெண்களின் சமூக அந்தஸ்து, சொத்துரிமைக்கு உத்தரவாதம் ; பெண் சமூகத்தில் இரண்டாம் பிரஜை
- கல்வி, ஒழுக்கம், வணக்க வழிபாட்டுக்கு உரிய அந்தஸ்து ; இவற்றுக்கு முக்கியத்துவமில்லை, மனித விருப்பு வெறுப்பே 
   செல்வாக்குப் பெற்றிருக்கும்
- மனித மேம்பாட்டை மையமாகக் கொண்டு கலையம்சங்கள் காணப்படும் ; இவை கீழ்த்தரமான உணர்ச்சிகளை
   வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கும்
- தக்வா அல்லது ஆன்மீகம் இங்கு முன்னுரிமை பெற அது அங்கு இருக்காது

(1v) ஜாஹிலிய்யாக் கால அரசியல் நிலை- அக்காலப் பிரிவில் அரேபியாவுக்கு வெளியே இரு பெரும் பேரரசுகள் அல்லது சாம்ராஜ்யங்கள் காணப்பட்டன.
1. பாரசீகப் பேரரசு -  Persian Empire     (கிழக்கு)                       2. ரோமப் பேரரசு   -  Romanian Empire (மேற்கு)
இவ்விரு பேரரசர்களுக்கு மத்தியில் அரேபியா அமைந்த போதும் அவற்றின் முடியரசு நிர்வாக முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இன, கோத்திர உணர்வு வலுப்பட்டிருந்ததே இதற்குக் காரணமாகும்.நபியவர்கள் பிறந்து வளர்ந்த ஹிஜாஸின் அரசியல் நிலை இதுவாயினும் கிழக்கே ஹீராவிலும் மேற்கே கஸ்ஸானிலும் முறையே பாரசீக, உரோம அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர். அரேபியாவில் மத்திய அரசு அமையாவிட்டாலும் ஒரு வகை நிர்வாக முறை அங்கிருந்ததை அறிய முடிகின்றது. சமூக மக்களுக்கிடையில் அவர்கள் சில பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
Eg: 1. பனூ ஜும்ஹ் குடும்பம் - குறிபார்க்கும் வேலை   
      2.  பனூ ஸஹ்ம் குடும்பம் - விக்கிரகங்களுக்காகப் பலியிடுபவற்றைப் பொறுப்பேற்றல், வழக்குகளைத் தீர்த்தல்.
      3. பனூ தமீம் குடும்பம்      - தண்டம் அறவிடல்
      4. பனூ அதீ குடும்பம்        - தூது செல்லல்

இவை தவிர அப்போது அங்கு வழக்கில் இருந்து வந்த பின்வரும் சொற்பிரயோகங்களும் அங்கு ஒரு நிர்வாக முறை இருந்ததை உணர்த்துகின்றன.
1.     'தாறுன்-நத்வா'    ஆலோசனை மன்றம்,  இது பாராளுமன்றம் போன்றதொரு அமைப்பாகும்.2. 'லிவாஃ'                 கொடி, யுத்தத்தில் தலைமை தாங்குவதை இது குறிக்கும்.
2.     'ஹிஜாபா'             கஃபாவிற்கு ஆடை போர்த்துதல்.
3.     'ஸிகாயா'              ஹாஜிகளுக்குக் குடினீர் வழங்குதல்.
4.     'ரிஃபாதா'               ஹாஜிகளுக்கு உணவு விநியோகித்தல்.
இவை அனைத்தும் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் அரேபியாவில் முறை சாரா அரசியல் நிர்வாக அமைப்பொன்று இருந்துவந்ததை எடுத்துக் காட்டுகின்றன. 

(v)  ஜாஹிலிய்யாக கால அரேபியரிடம் காணப்பட்ட மூடப்பழக்க வழக்கங்கள் சிலவற்றைப் பட்டியலிடுக.
1. அம்பு வீசிக் குறி பார்த்தல்                             2. சாஸ்திரம், சோதிடம் பார்த்தல்
3. ஃபஃல், மை வெளிச்சம் பார்த்தல்                  4. நட்சத்திரக் குறி பார்த்தல் (நவ்'உ) -நட்சத்திரக் குறி பார்ப்பவன்  முனஜ்ஜிம்
5. பறவைச் சகுனம் (தியரா)                              6. நாட் பலன் பார்த்தல்
7. இறந்தோரின் ஆவி சாந்தியடைய வேண்டும் என்பதற்காகப் பலியிடல்

* தீய பழக்க வழக்கங்கள்
1. வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடுதல்                 2. பழி வாங்குதல்    3. மதுவருந்துதல்           4. சூதாடுதல்
5. பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல்      6. வரை கடந்த விபசாரம்                              7. கோத்திரச் சண்டை

*  நற்பண்புகள்
1. தர்ம சிந்தை       2. வாக்கு மீறாமை       3. தன்மானம் காத்தல்         4. இலட்சிய வேட்கை      5. வறுமையில் பொறுமை
6. தலைமைத்துவத்துக்கு அடிபணிதல்      7. அமானிதம் பேணல்    8. விருந்தோம்பல்       9. போரில் புற முதுகு காட்டாமை
10. தளரா மன உறுதி      11. இறக்க சிந்தை      12. எளியோரை ஆதரித்தல்          13. நேர்மை      14. சுதந்திர வேட்கை





பகுதி 11
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

4)   அ) இஸ்லாம் வழங்கியுள்ள மனித உரிமைகள் பற்றி விளக்கம் தருக.
- அடிப்படை மனித உரிமைகள் பற்றிய சிந்தனை இஸ்லாத்துக்கு முன் காணப்படவில்லை.
-  உலக வரலாற்றில் – மற்கில் 13ம் நூற்றாண்டில்தான் Magna Carta - மக்னாகார்ட்டா ( ஜூன் 15, 1215),    Habeas Corpus – ஹேபியஸ்கோபஸ் (1679) எனும் பெயர்களில் அறிமுகமாகியமை.
* Magna Carta : இங்கிலாந்து மன்னனோடு போராடிப் பெற்ற இது மனித உரிமையின் ஊற்றுக்கண் எனப்படுகிறது.
* Habeas Corpus : குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒருவனைக் கைது செய்ய முடியாது
- 16ம் நூற்றாண்டில்தான் மேற்கில் மனித உரிமை அங்கீகாரம் பெற்றமை
- 18ம் நூற்றாண்டின் 80களில் அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் மனித உரிமைகள் அரசியல் யாப்பில் புகுத்தப்பட்டமை
- ஆனால் 7ம் நூற்றாணடிலேயே  இஸ்லாம் அல்குர்ஆன் ஊடாக மனித உரிமைகளைப் பிரகடனம் செய்தமை
 * இஸ்லாம் வழங்கியுள்ள மனித உரிமைகள்
1.     வாழ்வதற்கான உரிமை
“வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்” (6 : 151)
2.     உயிரைப் பாதுகாக்கும் உரிமை
“எவன் ஒரமனிதனை வாழவைக்கிறானோ அவன் முழு மனிதனையும் வாழவைத்தவனாவான்” (5 : 32)
3.     கற்பைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
“…நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம்…..” (17 : 32)
4.     நீதி கோரும் உரிமை
“ விசுவாச்களே, நீங்கள் நீதத்தை நிலை நாட்டுவதில்  அல்லாஹ்வுக்காக……” ( 5 : 18)
5.     சமத்துவ உரிமை
“……………உங்களை நாம் ஒரே மூலத்திலிருந்தே படைத்தோம்” (       :      )
6.     உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புப் பெறும் உரிமை (ஹஜ்ஜதுல் விதா உரை)
7.     மனித கௌரவத்தைப் பாதுகாக்கும் உரிமை
8.     தனிப்பட்ட வாழ்வில் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமை
9.     கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடும் உரிமை
10.  கருத்து வெளிப்பாட்டு உரிமை
11.  கூட்டம் கூடும் உரிமை
12.  வழிபாட்டு உரிமை
13.  அரசியல் விவகாரங்களில் பங்குகொள்ளும் உரிமை
14.  தொழில் புரியுமுரிமை
15.  கல்வி கற்கும் உரிமை
ஆ) நபி (ஸல்) அவர்களின் மதீனா ஹிஜ்ரத்தின் முக்கியத்துவம் பற்றி மதிப்பிடுக.
      - ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தமை
      - தனிமனிதப் பண்பாட்டு ஒழுங்கிலிருந்து குடும்பம், சமூகம், ஆட்சி நோக்கிய பரிமாணம்
      - முன்மாதியான சமூக அமைப்பொன்றின் உருவாக்கத்துக்கு அடித்தளமாய் அமைதல்
      - இஸ்லாமிய அரசின் தோற்றம்        - இஸ்லாமிய நாகர்க, கலாசார மேம்பாட்டுக்குக் களமமைத்துக் கொடுத்தல்
      - மதீனா நகரை மையமாகக் கொண்டதாய் அரபு சமூகம் வரலாற்றில் முதல் தடவையாக
        ஐக்கியப்பட வழிவகுத்தல்
      - குரைஷியரது அடாவடித்தனங்கள் அடக்கப்பட்டு அமைதி மிக்க சூழலொன்று       உருவாக்கப்பட்டமை
5)  அ) தௌஹீத் என்றால் என்ன?அதன் பிரிவுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
- பத விளக்கம்
- இஸ்லாமிய நாகரிகத்தின் அடிப்படையாக மட்டுமன்றி அதன் உயிரோட்டமாகவும் அமைவது
- இறைவன் ஒருவன் என்பதற்கு அப்பால், அந்த இறைவனுக்குத்தான் அனைத்து வகையான வழிபாடுகளும் என்பது
- அல்லாஹ்வின் ருபூபிய்யத்தையும்  உலூஹிய்யத்தையும்  அல்லாஹ்வுக்கு மாத்திரம் வழங்கி அவனது அஸ்மாஃ, ஸிபாத்துக்களின் அடிப்படையில் அவனை ஏற்றுக்கொள்வது
தௌஹீதின் பிரிவுகள்
- அல்குர் ஆனின் ஒளியில் இது முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது
1. ருபூபிய்யா
# நம்பிக்கை சார்ந்தது
* படைக்கும் ஆற்றலால் இறைவனை ஒருமுகப்படுத்தல்
- அகிலத்தின் படைப்பாளன், போசிப்பவன், திட்டமிடுபவன், நன்மை-தீமை,உயர்வு-தாழ்வு என்பவற்றுக்குப் பொறுப்பாளன் என்று ஏற்றுக் கொள்ளல்
- இப்பிரிவை மறுத்தவர்கள் வரலாற்றில் மிக மிகக் குறைவு;
- இணைவப்பாளர்களான நபியவகள் காலத்து அரேபியரும் இவ்வம்சத்தை  மறுக்காது ஏற்றிருந்தமையும்; இந்த ஒன்றுக்காகவே அவர்கள் முஸ்லிம்களாகக் கருதப்படாமையும்
Eg: “அவர்களிடம் வானகளையும் பூமியையும் படைத்தவன் யார், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியவன் யார் என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக அல்லாஹ்வே என்று கூறுவார்கள்.” (29 : 61)
- நாத்திகரும் இப்பிரிவை மறுப்போராவர்
2. உலூஹிய்யா
# நடத்தை சார்ந்தது
* வணக்க வழிபாடுகளால் இறைவனை ஒருமுகப்படுத்தல்
- ஏனைய மதங்களில் இருந்து இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டும் அம்சம்
- தொழுதல்,பிரார்த்தித்தல், உதவி தேடுதல், நேர்ச்சை வைத்தல் போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே எனவும் சகல வழிகாட்டல்களையும் வழங்கத் தகுதியானவன் எனவும் ஏற்றுக்கொள்ளல்
- ஆரம்ப  கால அரேபியர் ருபூபிய்யத்தை ஏற்றிருந்த போதும் இப்பிரிவை ஏற்காது அல்லாஹ்வுக்கு இணை வைத்ததோடு, பல நியாங்களைக் கூறி விக்கிரகங்களையும் ஏனையவற்றையும் வணக்கத்துக்குரியனவாகக் கொண்டிருந்தமை
- வரலாற்றில் இப்பிரிவை மறுத்தவர்களே அதிகம் என்பதும்; இவ்வம்சத்தையே இறைத்தூதர்கள் முக்கியப்படுத்திப் பேசியமையும்; இதற்காகவே அவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்கியமையும், சிலபோது கொலை செய்யப்பட்டமையும்
3. அஸ்மாஃ வஸ்ஸிஃபாத்
- அல்குர்ஆனிலும்  ஸுன்னாவிலும் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை உவமைப்படுத்தாமலும் மறுக்காமலும் செயலிழக்கச் செய்யாமலும் வலிந்து பொருள் கொடுக்காமலும் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளல்
- இதற்கு மாற்றமாகச் செயற்பட்டவர்கள் வரலாற்றில் முஃதஸிலா, ஜபரிய்யா, வஹ்ததுல் வுஜூத் முதலாம் வழிகெட்ட பிரிவுகளாக அறிமுகமுகமானமை
_ “அவனைப்போல எதுவுமில்ல. அவன் (அனைத்தையும்) நன்கு செவிமடுப்பவனாகவும் நன்கு பார்ப்பவனாகவும் உள்ளான்.”( 42 : 11)   “லைஸ கமிஸ்லிஹீ ஷைஉன், வஹுவஸ் ஸமீஉல் பஸீர்”
* இம்மூன்று அம்சங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே ஒருமுகப்படுத்துவதே தௌஹீதாகும் என்பது



ஆ) கலீபா உஸ்மான் (ரழி) ஆற்றிய சேவைககளும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும்
* கிலாபத்துக்கு முன்:
- இஸ்லாத்தின் வழியில் செலவு செய்தமை (கொடைகள்)
- யுத்த செலவுகளில் பங்கெடுத்தமையும், போராட்டங்களில் கலந்துகொண்டமையும்
- பொது நலப் பணிகளில் அமைந்த செயற்பாடுகள்
*கிலாபத்தின் பின்:
- கிலாபத் விஸ்தீரணம்            - கடற்படை உருவாக்கம்          - அல்குர்ஆன் பிரதியாக்கம் (கிராஅத் ஒருமைப்பாடு)
- மஸ்ஜிதுன்னபவி விஸ்தரிப்பு          - நீர்ப்பாஷன ஒழுங்கு

@ குற்றச்சாட்டுகள்:
·         சமயம் சார்ந்தவை
^ அல்குர் ஆன் பிரதிகள் எரிப்பு
^ ஹஜ்ஜில் கஸ்ரு- ஜம்உ
^ ஜும் ஆவில் இரண்டு அதான் சொல்ல ஏவியமை
·          நிர்வாகம்
^ உறவினர்களை உயர் பதவிகளில் அமர்த்தியமையும் சில ஸஹாபிகளை பதவி நீக்கம் செய்தமையும்
^ அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்
^ ஸஹாபாக்கள் சிலர் மீதான தண்டனை
^ ஹாஷிமீக்கள் புறக்கணிப்பு
^ பைதுல்மால் துஷ்பிரயோகம்

 6) அஇலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சி முன்னோடிகளுள் ஒருவரான அறிஞர் சித்தி லெப்பை அவர்களின் பணிகள் குறித்தான விளக்கம் தருக.
முஹம்மது காஸிம் சித்தி லெப்பை ( எம். சீ. )
குடும்பமும் வாழ்வும் :        *பூர்வீகம் அரேபியா ( அளுத்கமையில் வந்து குடியேறியவர்கள்)
பிறப்பு – 1833 மே மாதம் 11, கண்டி
* தந்தை - சித்தி லெப்பை (ஓர் அறிவாளி, 1833ல் பிரித்தானியரால் நியமிக்காப்பட்ட முதல் முஸ்லிம் புரொக்டர்)
* 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் ( இவரோடு மொத்தம் 5பேர்)
* ஐவரும் கல்வியறிவு உடையவர்கள்; அரபு மொழி பயின்றவர்கள்
* மூத்த சகோ முஹம்மத் லெப்பை – ஓர் ஆலிம், சமூகத் தலவர், ஒரு காழி, ஒரு புலவர்
* சகோதரி  முத்து நாச்சியா – ஆலிமா, சித்தி லெப்பை கண்டியில் ஆரம்பித்த முதல் முஸ்லிம் பெண் பாடசாலையின் அதிபர்
* கல்வி: (மூத்த சகோதரரரிடமும், கஸாவத்தை ஆலிம் அப்பாப் புலவரிடமும் ( அக்குறன ஷேகு முஹம்மது)அரபு மொழி
   கற்றல்;  கண்டி ஜெனரல் ஸ்கூலில் ஆங்கிலம் கற்றல் )
* திருமணம்: (1871ல் காயல் அப்துல் காதிர் மீயாவி மகள் செய்யிதா உம்மாவை மணம் செய்தல் (தமிழ், ஆங்கில, அரபு
   மொழி அறிவு)
* 1862ல் மாவட்ட நீதிமன்ற புரொக்டராகவும்; 1864ல் சுப்ரீம் கோர்ட் ப்ரொக்டராகவும் நியமனம்
* 1874 – 1878 காலப்  பகுதிகளில் முனிஸிபல் நீதிமன்ற நீதிபதியாக  நியமனம்,
* 1884 -87களில் கொழும்பில் வாழ்ந்த போதும் பின் கண்டியிலேயே வாந்தமை



*சிந்தனைத் தாக்கம்
1. ஆன்மீகம் (மூத்த சகோ, கசாவத்தை, பாதிப் மௌலானா, மனைவியின் தந்தை – காயல் என்றவகையில்)
2. முற்போக்கு அறிவியல் சிந்தனை (அரபி பாஷா, ஜமாலுத்தீன் ஆப்கானீ –எகிப்து, ஸேர் ஸெய்யித்  அஹ்மத் கான் – 
    இந்தியா)
* மரணம் – 1898, மஹியாவை கட்டுப்பள்ளியில் நல்லடக்கம், அரபி பாஷா கலந்து கொண்டமையும்; 1977ல் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தமையும்

பணிகள்
1 நூல்கள் வெளியீடு
*சமய நூல்கள் (ஷுரூதுஸ் ஸலாத் – தமிழில்)
*பாட நூல்கள் (துஹ்பதுன் நஹ்வு, அரபு முதல் + இரண்டாம் புத்தகம், ஹிதாயதுல் காஸிமிய்யா, தமிழ் 1-5ம் வகுப்பு வரை, கிதாபுல் ஹிஸாப்)
*நாவல் இலக்கியம் (அஸன்பே சரித்திரம் – இலங்கையின் முதல் நாவல் – 1885)
*மெஞ்ஞான நூல் (அஸ்ராருல் ஆலம் – இது சம கால மொழி நடையில் 1963ல் ஆர். பீ.எம். கனியினால் வெளியிடப்பட்டது)
*பத்திரிகை வெளியீடு (அ. முஸ்லிம் நேசன் – 1882.12.21- முஸ்லிம்களிம் 2வது பத்திரிகை – 1944 வரை வெளிவந்தது ; ஆ. ஞானதீபம் – மாத இதழ் – 1892 – ஆன்மீகம் சார்ந்தது – 12 இதழ்கள் மட்டுமே வெளிவந்தமை)

2. அரசியல்
- அரசியல் செல்வாக்கற்று அநாதைகளாக இருந்த முஸ்லிம்களின் னலனுக்காகக் குர்ல் கொடுத்தார்.
- எண்ணிக்கையில் குறைவாக இருந்த பறங்கியருக்கும் கோப்பித் தோட்டத்  துரைமாருக்கும் போல  முஸ்லிம்களுக்கும் பிரதி நிதித்துவம் வேண்டுமென சட்ட நிரூபண சபையில் குரல் கொடுத்ததால், 1889ல் பிரபல வர்த்தகர் எம். ஸீ. அப்துர் ரஹ்மான் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படல்
- 1865 முதல் 8 வருடங்கள் கண்டி முனிசிபல் சபையில் உறுப்பினராக இருந்து சேவையாற்றியமை
3. மூட நம்பிக்கையை ஒழிக்கவும், சமய ரீதியான மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் ஜம் இய்யதுல் இஸ்லாமிய்யா எனும் பெயரில் உலமாக்களையும் பிரமுகர்களையும் கொண்ட ஓர் அமைப்பை 1886ல் நிறுவியமை.

ஆ) தென்னிந்தியாவுடனான இலங்கை முஸ்லிம்களின் உறவும்  இவ்வுறவினால் ஏற்பட்ட சாதக பாதகங்களையும் விளக்குக.

- பின்வரும் மூன்று காலகட்டங்களில் இவ்வுறவு ஏற்பட்டுள்ளமை
1. இஸ்லாம் அறிமுகமான ஆரம்ப காலம்
2. பக்தாத் வீழ்ச்சியின் பின்
3. போர்த்துக்கீசரின் வருகையோடு

- வணிக நோக்கில் தென்கிழக்காசிய நாடுகளில் பயணித்த அரபு வியாபாரிகள் இலங்கையிலும் இந்தியாவிலும்
  குடியேற்றங்களை அமைத்திருந்தமை
- இரு நாடுகளுக்கும் இடையில் புவியியல் ரீதியாக இருந்த தூரத்தின் குறுக்கம்
- தென்னிந்தியர் வணிக நோக்கிலும் வேறுபல காரணங்களுக்காகவும் இலங்கையில் குடியேறியமை
- போர்த்துக்கீசரின் வருகையோடு அதுவரை அரபு நாடுகளுடன் இருந்து வந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை
- இக்காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக சடங்கு சம்பிரதாயங்களைத் தலைமை தாங்கி நடாத்துவதற்காக தென்னிந்தியாவில் இருந்து ஆலிம்கள் வரவழைக்கப்பட்டமை
- இரு சாராரதும் தாய் மொழி தமிழாக இருந்தமையும் ஆன்மீக சிந்தனைக்கான ஊடகமாக அரபுத் தமிழ் திகழ்ந்தமையும்
- சமய நூல்களும் சஞ்சிகைகளும் அரபுத் தமிழில் இந்தியாவில் இருந்தே வெளிவந்தமை
- திருமண உறவுகள்


சாதகங்கள்:
-  கலாசாரப் பாதுகாப்புக்கு வழியாக அமைந்தமை
- சமயச் சடங்குகளுக்குத் தலைமைதாங்க உள்ளூரில் ஆலிம்கள் கிடைக்காதபோது தென்னிந்தியாவில் இருந்து ஆலிம்களை வரவழைத்து அவற்றைச் செய்து கொள்ள முடிந்தமை
- சமய ரீதியான இலக்கியங்கள் அறிமுகமானமையும் (மஸாலாக்கள், முனாஜாத்துகள், கிஸ்ஸாக்கள்) விளைவாக அரபுத் தமிழ் வளர்ச்சி கண்டமையும்
- இதன் பயனாய் இஸ்லமிய இலக்கியங்கள் தோன்றியமையும்  ஷரீஆ தொடர்பான விடயங்களை விளக்கக்கூடிய நூல்கள் எழுதப்பட்டமையும் (தப்ஸீர், பிக்ஹ், ஒழுக்க நூல்கள்)
- இந்திய / தென்னிந்தியக் கட்டடக் கலையம்சங்கள் இலங்கை முஸ்லிங்களது கட்டடங்களில் செல்வாக்குச் செலுத்தியமை
- இரு நாட்டினருக்குமிடையே ஏற்பட்ட வணிக உறவுகள் உள் நாட்டுப் பொருளாதாரம் விருத்தியுற வழி செய்தமை
- இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆலிம்களும் வணிகர்களும் மஸ்ஜித்களையும் மத்ரஸாக்களையும் நிறுவியமை
- தமிழ் நூல்களாய் இந்தியாவில் பிரச்ரிக்க வாய்ப்புக் கிடைத்தமையும் அவற்றை இறக்குமதி செய்ய இலகுவாய் அமைந்தமையும்
- வியாபார, அரசியல் தொடர்பும் அவற்றல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டத் தூண்டப்பட்டமையும்
- கிலாபத், கல்வி மறுமலர்ச்சி முதலாம் சிந்தனைகளுக்கு இவ்வுறவு வித்திட்டமை (ஸெய்யித் அஹ்மத்கான் – அலிகார்; சித்திலெப்பை – ஸாஹிரா)
- நம் நாட்டில் இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களின் தோற்றத்துக்கு வழி செய்தமை (ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத்)
 பாதகங்கள்:
- அரபுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டமையும் அரபு மொழியின் முக்கியத்துவம் குறைந்தமையும்
- இஸ்லாம் என்ற பெயரில் இந்திய சூழலில் வளர்ச்சிகண்ட  கலாசாரப் பாரம்பரியங்கள் இலங்கை முஸ்லிம்களிடையே ஊடுருவியமை
- பெயர் சூட்டல், பெண்கள் பூப்படைதல், விவாகம், மரணம் முதலான நிகழ்வுகளில் அரேபியாவில் காணப்படாத பல சடங்குகள் அறிமுகமானமை
- குர்ஆன் மத்ரஸாக்களை நடாத்த தன்னிந்தியாவில் இருந்து தகுதியற்ற லெப்பைமார் வருகை தந்தமை
- தென்னிந்தியாவி இருந்து கிடைத்த சமய சிந்தனைகள் பிரதேசவாரியான தென்னிந்தியக் கலாசாரத்தைத் தழுவிய சிந்தனைகளாகக் காணப்பட்டமை
- கிடைத்த சமய நூல்கள் நூலாசிரியர்களதும் வெளியிட்ட மத்ரஸாக்களதும் சிந்தனைகளைத் தழுவிக் காணப்பட்டமை
- தவறானதும் அகீதாவுக்கு முரணானதுமான அத்வைத – ஸூபித்துவ சிந்தனைகளும் அமைப்புக்களும் தோற்றம் பெற்றமை
- அரபு மொழியின் முக்கியத்துவம் குறைந்து போனமை

7)   அ) இந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம் பற்றி விளக்குக.
- தென் கிழக்காசிய நாடுகளில் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் இந்தியாவை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
- அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான  அதே சமகாலப் பிரிவில் இலங்கையிலும் அறிமுகமானமை
(நபிகளார் காலத்திலும் ஸஹாபாக்கள் காலத்திலும்)
- நபித்தோழர்களான தமீம் அன்ஸாரி, உக்காஸா போன்றோரின் அடக்கவிடங்கள் தென்னிந்தியாவிலுள்ள கோவளத்திலும் பறங்கிப்பேட்டையிலும் காணப்படுகின்றமை
- முஹம்மத் பின் காஸிம் சிந்துவைக் கைப்பற்றலும் இஸ்லாம் அங்கு பரவியமையும்
கவர்னர் ஹஜ்ஜாஜின் கொடுமைக்கு அஞ்சி ஹாஷிமீக்களில் சிலர் இந்தியாவில் குடியேறியமை
- உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) காலத்தில் தஃவா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை
- கஸ்னி முஹம்மதின் படையெடுப்பைத் தொடர்ந்து வட இந்தியாவில் இஸ்லாம் பரவியமை
- தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் பரவலில் ஸூபிகளது செல்வாக்கு
 ஆ) அப்பாஸிய கிலாபத்தின் வீழ்ச்சிக்கு வழியமைத்த காரணிகளை விளக்குக.
 - அப்பாஸிய ஆட்சி பற்றிய சுருக்க அறிமுகம் (தலை நகர் பக்தாத்)  -  (ஹி. 132 – 656)  ;  (கி.பி. 750 – 1252)
* சமயம்
- நாட்டு நிர்வாக விடயங்களில் சமயக் கருத்துக்கள் முதன்மை பெறாமை
- சமய உட் பிரிவுகளின் தோற்றம் (முஃதஸிலா, காரிஜ், ஸூபிஸ சிந்தனைகள்)
* சமூகம்
- இஸ்லாமிய வழிமுறைக்கு முரணான பிற கலாசார அம்சங்களின் மேலதிக்கம் (ஆடம்பர மோகம்)
-  சமூக, கோத்திரப் பிளவுகள்
- அஜமி, அரபி வேறுபாடு
* அரசியல் சார்ந்தவை
- பிற்கால கலீபாக்களின் தகுதியின்மையும் பலவீனமும்
- துருக்கியர் செல்வாக்கு
- இராணுவக் கட்டமைப்பின் சீர் குலைவு
- சிற்றரசுகளின் தோற்றமும் அப்பாஸிய கலீபாக்கள் மீதான இவற்றின் ஆதிக்கமும்

8)   அ) உமையா ஆட்சியின் தோற்றப் பின்னணியை விபரிக்குக
    - நீண்ட காலமாக ஸிரியா மாகாணத்தின் கவர்னராகப் பணியாற்றிய முஆவியா (ரழி) இங்கு உமையாக் கோத்திரத்
     தாரைக் குடியமர்த்தியதோடு நில்லாது பிரதேச வாழ் மக்களோடு நளினமாகவும் நடந்து அவற்றினூடாகத் தனக்கென
     ஆதரவாளர் குழுவொன்றை  உருவாக்கிக்கொண்டமையும்
    - கலீபா உஸ்மானின் (ரழி) மரணத்தோடு கலீபாப் பதவியை நோக்கி நகர்ந்த்மை
       ^ கொலைக்குப் பழி வாங்கவேண்டும் என்பதில் காட்டிய தீவிரம்
       ^ ஆளுநர் பதவியிலிருந்து பதவி நீங்க மறுத்தமை
       ^ ஸிப்பீன் யுத்தம்
     - ஸிப்பீன் போரைத் தொடந்து இடம் பெற்ற சமாதான முயற்சியைய்த் தனக்குச் சாதகமாக அமைத்துக்கொண்டமை
     - முஆவியா (றழி) க்கும் ஹஸன் (ரழி)க்கும் இடையில் இடம் பெற்ற உடன்படிக்கையைத் தொடந்து கலீபாவாதல்
     - இவ்வுடன்படிக்கை மீறப்படலும் தனது மகன் யஸீதை அடுத்த கலீபாவாக நியமித்து  அதற்காக மக்களிடம் பைஅத்
       பெற்றுக்கொண்டமையும்

ஆ)  முஸ்லிம்கள் ஸ்பெய்னைக் கைப்பற்றுவதற்கு ஏதுவான காரணிகளைத் தந்து, அதனால் ஏற்பட்ட விளைவுகளை விளக்குக
- முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த வட ஆபிரிக்காவில் அமைதியும், மத-சகிப்புத் தன்மையும், செழிப்பும் காணப்பட்டபோது; அதன் அயல் நாடான ஸ்பெய்னில் அமைதியற்ற சூழல் காணப்பட்டமை
- ரொட்ரிகோ – அகீலா அதிகாரப் போட்டி
- ரொட்ரிகோவின் கொடுங்கோன்மை ஆட்சியில் மக்கள் அமைதி இழந்தமையும்; யூதர்கள் சமய, சமூக, பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டமையும்; கிறிஸ்தவத்தை ஏற்காதபோது அடிமையாக்கப்பட்டமையும் அதனால் உண்டான அச்ச நிலையும்
- கிறிஸ்தவ சமயப் பிரிவுகளிடையே காணப்பட்ட  முரண்பாடுகளும் போராட்டங்களும்
- கவர்னர் ஜூலியன் முஸ்லிம்களிடம் உதவி கோரி வள்ளங்களை அனுப்பி வைத்தமை
- மூஸா பின் நுஸைர் சிறு படை ஒன்றை அனுப்பி ஸ்பானியாவின் உள்-நாட்டு நிலவரத்தை அறிதலும், சாதகமான சூழல் இருப்பதைக் கண்டுகொள்ளலும்
- தாரிக் பின் ஸியாதின் தலைமையில் படை அனுப்பல்
-* விளைவுகள்:
1. ஐரோப்பாவில் இஸ்லாமிய சிந்தனைகள் பரவுவதற்குக் காரணமாய் அமைந்தமை
2. முஸ்லிம்களின் அறிவியல் ஆக்கங்கள் ஐரோப்பாவுக்குக் கிடைக்கக் காரணமாய் அமைந்தமை
3. ஐரோப்பிய மொழிகளிலரபு மொழிச் சொற்கள் கலந்தமை

09(அ) ”தஸ்கியா” என்பதன் மூலம் கருதப்படுவது யாது? மனித வாழ்வில் தஸ்கியாவின் முக்கியத்துவம் பற்றி விளக்குக.
- தஸ்கியதுன் நஃப்ஸ் என்பதன் சுருக்கமே தஸ்கியா என்பது
அறிமுகம்:   மனிதன் = உடல் (வீடு) + உள்ளம் (வீட்டிலுள்ள மனிதன்)
- பத விளக்கம்: உள்ளத்தைத் தூய்மைப் படுத்தல், வளர்த்தல், சுத்தப்படுத்தல்
- பரிபாஷை விளக்கம்:
* உள்ளத்தைப் பண்படுத்தி உணர்வுகளை சீர்படுத்தும் பணி
*உள்ளத்தைப் பண்படுத்தி, உணர்வுகளை சீர்படுத்தி, பாவங்களை விட்டும் தூர விலகிக்கொள்வது தஸ்கியா எனப்படுகிறது.
* ஆசைகளால் சூழப்பட்ட உலகில் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்ற சிந்தனைகள், ஆசைகள், செயல்கள் முதலானவற்றிலிருந்து உள்ளத்தைக் கட்டுப்படுத்தி சிறந்த பண்புகளை அதில் வளர்த்து தூய உள்ளத்தை நிலை பெறச் செய்வதே தஸ்கியாவாகும்.
- அத்தஸ்கியா = அன்னமா(வளர்ச்சி, விருத்தி)  + அத்தஹாரத் (சுத்தம் , தூய்மை) துர்க்குணங்களில் இருந்து சுத்தமாகி நற்பண்புகளை உள்ளத்தில் வளர்த்தல்
முக்கியத்துவம்:
- ஈமான், அமல்களோடு தொடர்புடைய மனோநிலை அல்லது உளப் பண்பு (தக்வா, அக்லாக், இஹ்ஸான்)
- உளக் கட்டுப்பாட்டுடன் பாவங்களிலிருந்து விலகி வாழ வழிவகுக்கின்றது.
- உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு வாழவும், முழு வாழ்வையும் வணக்கமாக்கிக் கொள்ளவும் இது துணை செய்கின்றது.
- உள நோய்களுக்கு நிவாரணமாக அமைகின்றது.
- “உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டவன் வெற்றி பெற்றுவிட்டான்; அதனைப் பாவத்தில் புதைத்தவன் தோல்வி அடைந்துவிட்டான்.” (அஷ்ஷம்ஸ்:91: 9 -10 )
- பிர்ஔனிடம் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வருமாறு நபி மூஸா (அலை) அழைத்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. (ஹல் லக இலா அன் தஸக்கா? உம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ள விரும்புகிறீரா?” (நாஸிஆத்: 79: 18)
- “அந்த மறுமை நாளில் ஒருவனின் செல்வங்களோ பிள்ளைகளோ அவனுக்குப் பலனளிக்கப்போவதில்லை; தூய்மையான உள்ளத்துடன் எவர் வருகிறாரோ அவரைத் தவிர” (ஷுஅரா: 26: 88))
- “யார் முஃமினாக இருக்கின்ற நிலையில் ஸாலிஹான அமல்களைச் செய்தவாறு வருகிறாரோ அவருக்கு உயர்ந்த தரஜாக்கள் உண்டு. நதிகள் ஓடுகின்ற சுவர்க்கங்களும் அவருக்குத் தயார் செய்யப்பட்ட நிலையில் உள்ளன.உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டவருக்கே இதகைய கூலி உண்டு. (ஸாலிக ஜஸாஉ மன் தஸக்கா) –(தாஹா: 20: 76)
- “குர்பானியினது இறைச்சியோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் சென்றடைவதில்லை. ஆயினும் உள்ளத்திலிருந்து பிரதிபலிக்கும் தக்வா மட்டுமே அவனைச் சென்றடைகிறது. (22:37)
- நபி (ஸல்) அவர்களின் பணிகளுள் ஒன்றாக அல் குர்ஆன் இதனை சுட்டிக் காட்டுகின்றது. “அவந்தான் எழுத்தறிவில்லாத சமூகத்திலிருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வேதத்தையும் ஞானத்தையும் போதிக்கிறார்” (62:2)
- “மனித உடம்பில் ஒரு தசைத் துண்டு உண்டு, அது சீர்திருந்தினால் அனைத்தும் திருந்தி விடும், அது கெட்டுவிட்டால் அனைத்தும் கெட்டு விடும். அதுவே உள்ளம்.” என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
- ஜிஹாதில் பெரிய ஜிஹாத் ஜிஹாதுன்-நஃப்ஸ் – உளப்போராட்டம் என நபி (ஸல்) அவர்கள் விளக்கியமை
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்