எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: June 01, 2017

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

*இலங்கை முஸ்லிம் வரலாறு இந்து சமுத்திரத்தின் வணிகப் பின்னணியுடன்    ஆரம்பமாதல்
*  வணிக நோக்கிலும் வேறு பல காரணங்களுக்காகவும் இங்கு வந்த இலங்கை முஸ்லிம்களின் மூதாதையரான அரேபியர் துறைமுகங்களை மையமாக வைத்தே  தமது குடியிருப்புக்களை அமைத்தமையும் இதுவே பிற்காலத்தில் முஸ்லிம் குடியேற்றங்கள் தொன்ற வழியமைத்தமையும்
*
அ). இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைக் கட்டியெழுப்பத் துணை செய்யும் அம்சங்கள்
சிங்களவர்களுக்கு ராஜாவளிமகாவம்சம்  சூல வம்சப் போன்று தமிழர்களுக்கு யாழ். வைபவமாலை போன்று முஸ்லிம்களுக்கென்று   வரலாறு சொல்லும் எதுவும் சான்றாதாரங்களாக இல்லை .  இப்பின்னணியில் பிவரும் அம்சங்களை வைத்துத்தான் நம் நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றைக் கட்டியெழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1. அரபுத் தேச சஞ்சாரிகள் விட்டுச் சென்றுள்ள குறிப்புக்கள்
2. அரபுக் கல்வெட்டுக்கள்
3. அரபு நாணயங்கள்
4, முஸ்லிம்களிடையே வழி வழியாகச் சொல்லப்பட்டுவரும் மரபு வழிச் செய்திகள் (பாவாதம் மலை,  மானி. கல் கண்காட்சி)
5. காலனித்துவ வாதிகள்  நம் நாட்டில் விட்டுச் சென்றுள்ள தகவல்கள்
6. வரலாற்றுத் தொன்மை கொண்ட மஸ்ஜித்களும் நினைவுத் தூபிகளும் (கல்லறைகள்)


அரேபியருக்கும் நம் நாட்டுக்கும் இடையிலான  உறவின்  வரலாற்றுத் தொன்மை:
* கிறிஸ்தவ யுகம் ஆரம்பமாகமுன்னரே  இந்த  உறவு  வணிக  ரீதியாக  நிலவி வந்துள்ளமை
* புராதன காலத்தும்  மத்திய காலத்தும் கடல் மார்க்க  வணிகப் பதையில்  இலங்கை அமைந்திருந்தமையும்  துறைமுக நகர்களூடாக நடைபெற்ற இந்த வணிகத்தில்  பல்வேறு வணிகக்  குழுவினர் தங்கிச் சென்றமையும்
*  கி. முற்பட்ட காலம் முதலே  நம் நாடு விதேச  வணிகர்களின்  கவன ஈர்ப்பைப் பெற்றிருந்தமை
காரணம்
1. இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருந்தமை
2. நம் நாட்டின் புவியியல் நிலை
3. பசுமையும் செழிப்பும் மிக்க இந்த நாட்டின் வணிலப் பொருட்கள்
* இக்காலத்திய வணிக பிதாமகர்கள் (ரோமர், பாரசீகர், அபிஸீனியர், அரேபியர்)
* CAPE ROUTE வணிகப் பாதை கண்டுபிடிக்கப்படுமுன்னர் கிழக்கையும் மேற்கையும் இணத்த  வணிகப் பாதைகள்
1. Persian Gulf Route            2. Red Sea Route  _ பட்டுப் பாதை (சீனா – இலங்கை - )
* இந்த நிலை, இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி நடந்த கிழக்கு – மேற்கு வணிகத்தில் அரேபியர் முக்கிய இடம் பெற வழி செய்தமை
* அப்போதைய இலங்கையின் கேந்திர அமைவு, அரபு – பாரசீகக் கப்பல்கள் தங்கிச் செல்லும் வணிக மத்திய தளமாக இலங்கையை மாற்றியமை
* கிரேக்கருக்கு முன்னரே அரேபியர் இந்தியாவை அறிந்திருந்தமை
* ஆரியர் இலங்கைக்கு வருமுன்னரே  அரேபியர் இங்கு குடியிருந்தனர் . WILHELM GEIGR 
* விஜயனும் (முதல் ஆரியன்)  அவனது 700 தோழர்களும் இங்கு வருமுன்பே – கி.மு. 453 யமனியர் குடியிருந்தனர். WILHELM GEIGR 
* கி,மு. 377ல்  (பண்டுகாபயன் காலம்  377 -  307) தலைநகர் அநுரதபுரத்தில்  அரேபியருக்கெனத் தனியான வீடுகள் இருந்தன.
   – அந்திரியஸ் நெல்
* கடந்த 2000 ஆண்டுகளாக அரேபியர் இலங்கையில் குடியிருப்பதால், வேடரையும் இங்குள்ள ஏனைய பழங்குடிகளையும் போன்று  அவர்களும் இந்த நாட்டின் பழங்குடிகளே – முன்னாள் அகழ்வாராய்ச்சியாளர் கலாநிதி பாலேந்திரா
* கிறிஸ்தவ ஆண்டு தொடங்கு முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்தனர். – பிளினி
*கி.பி. 414ல் அரபு வணிகர்களை அ நுரதபுரத்தில்  சந்தித்ததாகவும் அவர்களின் வீடுகள் அழகாகக் காட்சியளித்தன என்றும் சீன யாத்திரிகர் பாகியன் குறிப்பிடுகிறார்.
* இலங்கை நாடு எந்தளவு பழமை வாய்ந்ததோ அந்த அளவுக்கு இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களும் பழமையானவர்களே – SWR

 1. கிழக்கு - மேற்கு கடல் மார்க்க வர்த்தகப்பாதையில் இலங்கை அமைந்திருந்தமை
 2. வர்த்தகப் பண்டங்கள் கிடைத்தமை
 3. வாய்ப்பான துறைமுக வசதிகள்
 4. சுதேசிகள் வெளி நாட்டு வர்த்தகத்தில் ஈடுபாடு காட்டாமையால் சுதேச மன்னர்கள் அரபு வர்த்தகர்களை ஆதரித்தமை
 5. பாவா ஆதம் மலைத் தொடர்பு
 6. சுதேசிகளின் உபசரிப்பும் வர்த்தகத்துக்காகக் கிடைக்கப் பெற்ற சுமுகமான சூழலும்
 7. சுதேசப் பெண்களை மணம் முடித்தமை

ஆரம்ப கால  முஸ்லிம் குடியிருப்புக்களும்  இலங்கையில் இஸ்லாத்திம் பரலும்
* முதல் முஸ்லிம் குடியேற்றம் எப்போது நிகழ்ந்தது என்பதில் தெளிவான முடிவு இல்லாதபோதும்,  இங்கு இஸ்லாத்தின் பரவலுக்கு கி. முற்பட்ட காலம் முதல் வணிக ரீதியாக உறவு வைத்திருந்த   அரபு வணிகப் பரம்பரையினரே  காரணமாக இருந்தனர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
* வணிக ரீதியாக இங்கு வந்த அவர்கள், கி.முற்பட்ட காலங்களில் போலவே கி. பிற்பட்ட காலங்களிலும், இஸ்லாத்தின் பின்னரும்  இந்த நாட்டின் துறைமுக நகர்களிலும் உள்-நாட்டுப் பகுதிகளிலும்  வந்து செல்பவர்களாகவும் குடியேற்றங்களை அமைத்து வாழ்பவர்களாகவும் இருந்துள்ளனர்.
Eg:
1.” கி.பி. 4 – 7ம் நூற். காலப்பிரிவில் அரபு -  பாரசீக வணிகக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களைத் தரிசித்தன.”
 ( 6ம் நூற். சேர்ந்த எகிப்திய  மத குரு Kosamas in his Topographia  Christiana)
2. கி.பி. 414ல் இலங்கையைத் தரிசித்த சீன யாத்திரிகன்  பாகியன்,  இங்கு அரபு வணிகர்களைச் சந்தித்ததாகக் கூறுகிறான்.
3. கி.பி. 6ம் நூற்.ல் இஸ்லாத்தின் அறிமுகத்தோடு பல நாடுகள் (ஸிரியா, ஈராக், பாரசீகம், எகிப்து) இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டதால், இப்பகுதிகளுடனான  வணிக முயற்சிகளும்  உத்வேகமடைந்து  இப்பகுதிகளிலெல்லாம் அரபுக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன.. ( சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யுமளவுக்கு  கண்டன் துறைமுகத்து அரபுக் குடியேற்றம்) $ இக்காலப் பிரிவில் இலங்கையிலும் சிற்சிறு குடியேற்றங்கள் இருந்தமை
* ஹுஸைன் இப்னு முஹம்மதின் “அல்கியாபாகறி”யை  ஆதாரம் காட்டி  சித்திலெப்பை முஸ்லிம் நேசனில் – 1898  எழுதிய  இலங்கை முஸ்லிங்களின் வரலாறு என்ற ஆக்கத்தில் குறிப்பிடும் வஹப் இப்னு அபீ ஹப்ஸாவின் (கி.பி. 628)  சம்பவம்
* இக்கருத்தை நிறுவும் வகையில் அமையும்  TW  Arnoldஇன்  The Preaching of Islam
* கோவளத்திலும் பறங்கிப்பேட்டையிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்ற  நபித்தோழர்களான தமீம் அன்ஸாரி, உக்காஸாவின் அடக்கவிடங்கள்.
* இப்னு ஷஹ்ரயார்  “அஜாஇபுல் ஹிந்து” எனும் நூலில் குறிப்பிடும்,  அரேபியாவில் இஸ்லாம் ப்ரவும் செய்தியை அறிந்து  அதனை அறிந்துவருவதகாக இருவர் அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட  சம்பவம்
* வணிக நோக்கில் அடுத்த காற்று வீசும் வரை இங்கு தங்கிய அரேபியர் சுதேசப் பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்தமை, இலங்கையில் முஸ்லிம் சமூகமொன்று தொன்ற வழி செய்தமை
* ஆரம்ப கால முஸ்லிம் குடியேற்றங்கள் அரபு ஆண்களையும் சுதேசப் பெண்களையும் கொண்ட தாகவே இருந்தன. (பேராசிரியர் கெ. டப்லியூ. குணவர்தனா, எஸ். அரசரத்தினம்)
* அரபு ஆண்களையும் பெண்களையும் கொண்ட குடியிருப்புக்கள் காணப்பட்டமை ( அப்துல் மலிக்கினதும் வலீதினதும் கொடுமைக்கு அஞ்சி ஹாஷிமிக்கள் சிலர் இங்கு குடியேறியமை – Sir, Alexander Johnston
* கி.பி. 8ம் நூற்றாண்டளவில் இலங்கையில் முஸ்லிம் குடியிருக்கள் காணப்பட்டதை,  நிறுவும் வகையில் அமைந்துள்ள, அரபு வரலாற்றாசிரியர் அல்-பலாஸூரி  தனது புதூஹுல் புல்தானில் குறிப்பிடும் சம்பவம்.. (இந்தியா கைப்பற்றப்படல்)
* ஆரம்ப கால முஸ்லிம் குடியிறுப்புக்களை ஆதாரப்படுத்தும்
^ கல்லறை  நடு கற்கள் – Tombs  (மீசன் கம்பு)
Eg: 1. 1787ல் கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட , ஹிஜ்ரி 337ல் நடப்பட்ட  காலித் இப்னு பகாயாவின் (இ. 317) கல்லறை  நடுகல்
       2.  மன்னார் புளியந்தீவில் கண்டெடுக்கப்பட்டதில் இஸ். மரபைத் தழுவிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை
       3.  2ம் உலகப்போரின்போது திருமலையில் கண்டெடுக்கப்பட்ட  ஹி. 2ம் நூற்/ச் சேர்ந்த காழி ஹபீபின் கல்லறை நடுகல்
       4.  மடுள்போவ  மையவாடியில்  1976ல்  கண்டெடுக்கபட்ட   மூன்று கல்லறை நடுகற்கள்
@ இவை 10ம், 14ம் நூற்/ல் இங்கு பரவலாக முஸ்லிம் குடியிறுப்புக்கள் இருந்துள்ளதைக்  காட்டுகின்றன.
^ புதையல்கள் / நாணயங்கள்
Eg: 1.  முதுராஜவலையில்  கண்டெடுக்கப்பட்ட  வலீத், ஹாரூன் காலத்து நாணயங்கள்
       2. 11  -   13ம்  நூற்/களைச் சேர்ந்த  அரபு நாணயங்கள் நீர்கொழும்பு, வத்தளை, கம்பளை, சப்ரகமுவா, கலகெதர போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை
@ இவை வணிக உறவை மடுமன்றி குடியேற்றங்கள் ஏற்பட்ட காலப்பகுதியையும் அறிய உதவுதல்
* அரபுக் கடற்பிரயாணிகள் விட்டுச் சென்றுள்ள தகவகள்  9ம் 10ம் நூற்றாண்டுகளில்  கொழும்பு, பேருவலை, களுத்துறை, காலி, வெலிகாமம், மாத்தறை, திருமலை, மன்னார் போன்ற இடங்களில்  முஸ்லிம் குடியிருப்புக்கள் இருந்ததைக் காண்பிக்கின்றன.
* 10ம் நூற்/ல் அப்பாஸிய ஆட்சி வீழ்ச்சி காணலும்;  இலங்கை முஸ்லிம்கள் தென்னிந்தியரோடு தொடர்பு கொண்டமையும், தென்னிந்திய வணிகர்கள் இலங்கையில் குடியேற்றம் அமைத்து வாழ்ந்தமையும்.
* இந்த நிலை  அதுவரை இருந்து வந்த தனி அரபுக் குடியேற்றம் எனும் பண்பை இழந்து அரபு – இந்தியக் குடியேற்றம் எனும் தன்மையைப் பெற வழிவகுத்தமை.
* 12ம் நூற்/ல் பேருவலையில் வாழ்ந்த மூஸ்லிம் முஸ்லிம் குடியேற்ற பற்றிய சூழவம்சம் குறிப்பிடும்  தகவல்
* 14ம் நூற்/ல் காலியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பற்றிய  இப்னுபதூதா  குறிப்பிடும் தகவல்  (கப்பல் தலைவன் நாகூதா இப்ராஹீம்)
* 10ம் நூற்.டு முதல் பேருவலையிம் முஸ்லிம் குடியிருப்புகள் இருந்து வருவது பற்றிய தகவல் (கோயாஜான்)
உள் நாட்டுக் குடியிரிப்புக்கள் 9!4ம் நூற்றாண்டு)
* குரு நாகலைக் குடியிருப்புக்கள் ( அஸ்வத்தும கிராமம் – மதகெடிய குமாரி ஹாமினே – வஸ்துஹிமி)
* இப்னுபதூதா குணாக்கர் எனக் குறிப்பிடும் கம்பளைக் குடியேற்றம்

இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்புக்கள்
·         அறபு வர்த்தகர்களின் பரம்பரையினர் எனக் கருதப்படும் இலங்கை முஸ்லிம்கள், அவர்கள் இங்கு வந்து குடியேறிய காலம் முதலே இந்நாட்டின் அரசியலில் பல்வேறு பரிமாணங்களில் தமது பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் என அறிய முடிகிறது.
·         கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த அறபுப் பிரயாணி ஒருவர், சிங்கள மன்னர் ஒருவரிடம் முஸ்லிம் அமைச்சர்கள் நால்வர் பணியாற்றினர் என்ற தகவலைத் தருகிறார்.
·         ஆரம்ப கால முஸ்லிம்கள் இந்நாட்டு முஸ்லிம் அல்லாதோரிடையே எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போராகவும் வர்த்தகம் தொடர்பான விடயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்குவோராயும் விளங்கியுள்ளனர்.
·         உள்நாட்டு விவசாயத்துறை பாதிப்புக்குள்ளானபோது உள்நாட்டின் ஏற்றிறக்குமதி வர்த்தகத்தைப் பலப்படுத்த இலங்கை மன்னன் முஸ்லிம் தூதுக்குழுக்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்தான்.
·         வெளிநாட்டு வர்த்தகத்தில் முஸ்லிம்களுக்கிருந்த இத்தகைய செல்வாக்கு போர்த்துக்கேயரையே பயம் கொள்ளச் செய்திருந்தது.
·         போர்த்துக்கேயரைத் துரத்துவதற்காக மாயாதுன்னை மன்னனுக்கு கள்ளிக்கோட்டை மன்னனின் படை உதவியைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் அனுப்பப்பட்டார்கள்.
·         போர்த்துக்கேயருக்கு எதிராக டச்சுக்காரரின் உதவியைப் பெறுவதற்காக கண்டிய மன்னன் முஸ்லிம்களையே அனுப்பிவைத்தான்.
·         போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடுவதற்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்புக் காரணமாகவே கண்டி மன்னன் இராஜசிங்கன் நன்றிக் கடனாக அக்குறனையில் முஸ்லிம்களைக் குடியேற்றினார்.
·         கண்டிய மன்னர்களின் தூதுவர்களாகவும் முஸ்லிம்கள் செயற்பட்டனர்.
·         ஒல்லாந்தரைத் துரத்தியடிப்பதற்காக (கர்நாடக) நாவாப் முஹம்மதலியிடம், உஸ்மான் லெப்பே மௌலாமுகாந்திரம் என்பவரை கண்டி மன்னன் தூதராக அனுப்பினான்.
·         ஆங்கிலேயரின் தாராண்மைக் கொள்கை முஸ்லிம்களைத் தேசிய அரசியலிலும் பங்குகொள்ள வைத்தது.
·         1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட நிரூபண சபையில் 1889 முதல் முஸ்லிம்களும் அங்கம் வகித்தனர்.
·         1865ல் அறிமுகமான மாநகர, உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்லிம்களுக்குப் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
·         1919ல் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் உபதலைவர்களில் ஒருவராக இளம் பட்டதாரி T.B.ஜாயா தெரிவானதோடு முஸ்லிம்களும் சுதண்ட்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
·         டொனமூர், சோல்பரி யாப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களிடம் யாப்புச் சீர்திருத்த சட்டக் கோரிக்கைகளை முஸ்லிம்கள் முன்வைத்தனர்.
·         சட்ட சபைக்கான முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் கவர்னரால் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதை எதிர்த்து , படித்த வர்க்கத்தினர் சிலர் அம்மூவரும் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தபோது, இக்கோரிக்கை கவர்னரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் முஃஜு இலங்கையையும் தழுவிய  தேர்தல் நடாத்தப்பட்டது
·         இத்தேர்தலில் முஹம்மது மாகான் மாக்கார், N H M அப்துல் காதர்,  D B ஜாயா ஆகிய மூவரும் 1924ல் தெரிவு செய்யப்பட்டனர்.
·         தமக்குச் சுதந்திரம் அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி, அரசாங்க  சபை  2ம் உலக ப் போரின் பின்னர் கோரிக்கை விடுத்தபோது இந்த 3 முஸ்லிம் உறுப்பினர்களும் எவ்வித நிபந்தனையும் விதிக்காது  ஆதரவு  நல்கினர்.

ஆரம்பக் குடியேற்றங்கள்
      * குதிரைமலைமன்னார்கொழும்புபுத்தளம்பேருவலைகாலிதிருகோணமலையாழ்ப்பாணம்
     காரணங்கள்:
        - கிழக்கு - மேற்கு கடல் மார்க்க வர்த்தகப் பாதையில் இலங்கை அமைந்திருந்தமை
        - இறக்குமதிப் பண்டக  வினியோகமும்ஏற்றுமதிப் பண்டகச் சேகரிப்பும் துறைமுகங்களை அண்டியதாக இடம் பெற்றமை
        - கிழக்கு - மேற்கு வர்த்தகம்
           1. காலி - திருகோணமலை ஊடாகவும்
           2. கொழும்புபுத்தளம் (பாக்கு நீரிணை) ஊடாகவும்      இடம் பெற்றதால்இலங்கையின் மேற்குகிழக்கு கரையோரத் துறைமுக நகர்களில் ஆரம்பக்
          குடியேற்றங்கள் அமைந்துள்ளன.
        - கரையோரக் குடியேற்றங்கள்:
          காலிபேருவலைகொழும்புபுத்தளம்மன்னார்திருகோணமலைமாந்தைகுதிரைமலை

ன்றைய குடியிருப்புக்கள்
கிழக்கு மாகாணத்தில்  அம்பாறைகாத்தாங்குடிஏறாவூர்திருகோணமலைமூதூர்கிண்ணியா
மேல் மாகாணம்: கொழும்புகளுத்துறைகம்பஹா மாவட்டங்கள்
மத்திய மாகாணம்: கண்டி மாவட்டம்      & தென் மாகாணம்: காலிவெலிகமமாத்தறை.
சப்ரகமுவா மாகாணம்: கேகாலை மாவட்டம் (மாவனல்ல)
வடமேல் மாகாணம்: புத்தளம்குருநாகலைப் பிரதேசங்கள்


காரணங்கள்:
1.     ஆரம்பகால மன்னர்களின் அரவணைப்பு
2.     விவசாயவர்த்தககடற்றொழில் முயற்சிகளுக்குச் சாதகமாக அமைந்தமை
3.     கூட்டாக வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலை காணப்பட்டமை
4.     அயலவர்களின் பாதுகாப்பு தொடர்ந்தும் கிடைத்து வந்தமை

இலங்கை முஸ்லிம்களின் சிதறிய குடியிருப்புக்களுக்கான காரணங்கள்
1. திட்டமிட்ட முறையில் குடியேறாமை
2. பல்வேறு காரணங்களுக்காகக் குடியேறியமைகுடியேற்றப்பட்டமை
3. கட்டுப்படுத்தவும் வழிகாட்டவும் தலைமைத்துவம் இல்லாமை
4. ப்ரம்பரிய பரபரையாக சொத்துக்கள் காணப்பட்டமை
5. குடுபத்தினரோடு வாழவேண்டுமென்ற கொள்கை (தொழிலுக்குச் செல்லும்போதும் குடும்பத்தின ரை அழைத்துச் சென்று குடியேறியமை


இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்புக்கள்
1). ஐரோப்பியர் வருகைக்கு முன்னர்
நம் நாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தி இங்குள்ள உற்பத்திப் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை
ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தைக் காண்பித்துக் கொடுத்தமை
தவளம் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தியமை
அந்நியருக்கு எதிராக இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடியமை
நெசவாளர்களை அழைத்து வந்து நெசவுத் தொழிலை  அறிமுகப்படுத்தி வளர்த்தமை
யூனானி மருத்துவத்தை அறிமுகப்படுத்தியமை
அரச தூதுவர்களாகவும் மந்திரிகளாகவும்உயர் அதிகாரிகளாகவும் இருந்து பணியாற்றியமை

2).  காலனித்துவ ஆட்சிக் காலத்தில்
காலனித்துவ வாதிகளது வருகையின் நோக்கத்தை அறிந்து எதிர்த்து நின்றமை
சிங்கள மன்னர்களுக்கு உதவியமை (கள்ளிக்கோட்டை சாமோரினின் படையுதவியை பெற்றுக் கொடுத்தமை)
மன்னரைக் காட்டிக் கொடுக்காமை (மகிரகம்மன)
                காரணம்: நாட்டைக் கைப்பற்றாமல் காத்தல்
                                வளங்கள் சுரண்டப்படாமல் காத்தல்
                                தமது வருமானம் குறையுமென பயப்படுதல்.
3) சுதந்திரத்தின் பின்
தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒத்துழைத்தல் (நாடு பிளவுபடாமல்சிங்களம் அரச மொழி)
தேசிய கொள்கைகளை அமைச்சர்களாக நின்று நிலைநாட்டல் (பாடசாலைகளைப் பொறுப்பேற்றல்புதிய கல்வித் திட்ட அறிமுகம் - 1972)
தேசிய கலாசாரத்தின் போது உதவல் (பெற்றோலியப் பொருட்களை மத்திய கிழக்கிலிருந்து பெற்றுக் கொடுத்தல்தொழில் வாய்ப்புக்கு சிபாரிசு செய்தல்மத்திய கிழக்கிலிருந்து பொதுச் சேவைக்காக நிதியுதவி)
தோட்டப்பயிர்ச்செய்கைஏற்றிறக்குமதி வர்த்தகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வெளிநாட்டுச் செலாவணி
அரச அலுவல்களில் நம்பிக்கையுடன் செயலாற்றுதல்         # உரிமைகளுக்காக ஆயுதமேந்தாமை.


இலங்கை – தென் இந்திய முஸ்லிம் உறவும் அதனால் உண்டான சாதக பாதகங்களும்  
 
1. இலங்கை இந்திய முஸ்லிம் தொடர்பு            
2. கலாசாரத் தாக்கம்

1). இலங்கை இந்திய முஸ்லிம் தொடர்பு ஏற்பட்டமைக்கான காரணங்கள்.

1. புவியியல் ரீதியாக இலங்கையும், இந்தியாவும் மிக நெருங்கிக் காணப்பட்டமை.
  • இரு பிரதேசங்களுக்குமிடையில் அமைந்துள்ள பாக்குநீரிணையை வள்ளங்கள் மூலமாகக் கடந்து விடக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.
  • நவீன இயந்திரங்கள் பாவனைக்கு வரமுன்னரே மரக்கலங்கள், பாய்க்கப்பல்கள் மூலம் இரு பிரதேசங்களுக்குமிடையில்        போக்குவரத்துத் தொடர்புகள் காணப்பட்டன.

2. இவ்வாறான அண்மை நிலை காரணமாக தென்னிந்தியாவில் வர;த்தகம் செய்த குடியேறிய அரபு முஸ்லிம்களுக்கும்
     இடையில் வர்த்தக ரீதியாகவும், சமய கலாசார ரீதியாகவும் தொடர்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் 
     காணப்பட்டமை.

3. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறிய உறாசிமீக்களில் ஒரு பகுதியினர் தென்னிந்தியப் பிரதேசங்களிலும்
         குடியேறியமை.

4 ஐரோப்பியரின் வருகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் அரேபியாவுடனான தொடர்புகள் வைத்துக் கொள்வது
சுதந்திரமமாக  அமைந்தமை.
     - ஐரோப்பியர் அரேபியரை சமயம், வர;த்தகம் முதலிய துறைகளில் எதிரிகளாகக் கண்டனர;.
      - இதனால் அரேபியாவுடன் தொடர்பு கொள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
     - எனவே அவர;கள் வர்த்தக மற்றும் கலாசாரத் தேவைகளுக்காகத் தென்னிந்தியாவை நாடலாயினர்

5. அன்று தமிழ் வியாபார மொழியாக விளங்கியமையாலும், தென்னிந்திய - இலங்கை முஸ்லிம்கள் தமிழையே தாய்மொழியாகக்
      கொண்டமையாலும் தென்னிந்தியத் தொடர்பு இலகுவானதாயமைந்தது.

6. போர்த்துக்கேயரது அடாவடித்தனங்கள் காரணமாக துறைமுகப் பட்டிணங்களில் இருந்தும், கரையோரப் பிரதேசங்களிலிருந்தும் 
      வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு தென்னிந்திய முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்பட்டது. அதே நேரத்தில்
      போர்த்துக்கேயருடன் பகைமைப்பட்ட சீதாவக்கை, கண்டிய மன்னர்களுக்குக் கடற்படை மூலம் அவர்களை எதிர்க்க
      தென்னிந்திய ஆதரவு தேவைப்பட்டது. இதற்காக முஸ்லிம்கள் முகவர்களாகப் பணியாற்றினர;.

இலங்கை தென்னிந்திய முஸ்லிம்களைத் தொடர;புபடுத்திய சாதனங்கள்.
       - இஸ்லாம் சமயம்
       - வர;த்தகம்
       - கலாசார அம்சங்கள்
       - சமூகத் தேவை, சமூகப் பாதுகாப்பு
       - ஐரோப்பியரின் எதிர;ப்பும், சிங்கள மன்னர;கள் அவர;களைத் துரத்த முஸ்லிம்களின் துணையை நாடியமையும்.
       (உதாரணம்: கள்ளிக்கோட்டை சமோரினது கடற்படை உதவி)


இத்தொடர;பு ஏற்படுத்திய கலாசார ரீதியான தாக்கங்கள்.   

   1. சாதகங்கள்.
       - முஸ்லிம்கள் தமது கலாசாரத் தெடர;ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக இத்தொடர;பு அமைந்தது.
       - தமிழ் மொழியிலான, அரபுத் தமிழிலான இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைத்தன.
              (உதாரணம்: தப்ஸீர்கள், ஹதீஸ் நூற்கள், பிக்ஹ் நூற்கள், ஒழுக்க ரீதியான நூற்கள், அதபுமாலை,  
                       பெண்புத்திமாலை)
       - அரபு மொழியிலான சமய நூற்கள் பெற வழி கிடைத்தமை.
       - இந்திய மத்ரஸாக்களில் சேர;ந்து மார;க்கக் கல்வி கற்க சந்தர;ப்பம் கிடைத்தமை.
  சமயச் சடங்குகளுக்கு தலைமை தாங்க ஆட்கள் இல்லாத போது தென்னிந்தியாவிலிருந்து ஆலிம்களை
         வரவழைக்க  
         வாய்ப்புக் கிடைத்தமை.
       - இந்திய வியாபாரிகள், ஆலிம்கள் மஸ்ஜித்களையும், மத்ரஸாக்களையும் தோற்றுவித்தமை.
       - தமிழ் நூல்களைப் பிரசுரிக்க வாய்ப்புக் கிடைத்தமை.  இறக்குமதி செய்ய இலகுவாக அமைந்தமை. பிரித்தானியப்
         பேரரசின் கீழ் இரு பிரதேசங்களும் இருந்தமை.
       - வியாபார அரசியல் தொடர்பும், சுதந்திரப் போராட்டத்தில்  பங்கேற்றலும்.
              (உதாரணம்: முஸ்லிம் லீக் என்ற பெயர்)

   2. பாதகங்கள்.
       - அரபு மொழியின் முக்கியத்துவம் குறைந்தமை.
       - அரபிகளுடனான தொடர்பு தொடர;ந்து துண்டிக்கப்பட்டமை.
       - இந்திய மயப்படுத்தப்பட்ட இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைத்தமை.
              (கிஸ்ஸா, மஸாலா, பிள்ளைத் தமிழ்)
       - பிரதேச வாரியாக இஸ்லாமிய சிந்தனை கிடைத்தமை. (தென்னிந்திய கலாசாரத்தைத் தழுவிய சிந்தனைகள);
         உதாரணம்: குறிப்பிட்ட சில சமய நூல்களின், குறிப்பிட்ட சில ஆசிரியர;களின், மத்ரஸாக்களின் கருத்துக்கள் மட்டும்  
        இஸ்லாமாகக் கருதப்பட்டமை.)
       - இந்தியாவிலிருந்து ஆலிம்கள் வந்ததால் இலங்கையிலிருந்து கற்கச் செல்லத் தேவையில்லாது போனமை.
        இஸ்லாம் சரிவர விளக்கப்படாமை.
       - சமயச் சடங்குகளில் தென்னிந்தியக் கலாசாரம் ஊடுருவியமை. (சீதனம், தாலி, நேரம்)
       - தென்னிந்தியத் தமிழ், அரபுத்தமிழ் இலக்கியங்கள் திணிக்கப்பட்டமை.
       - தவறான ஸூபித்துவ ஒழுங்குகளுக்கான அமைப்புகள் தோன்றியமை.
       - இலங்கை முஸ்லிம்களின் வளங்கள் சுரண்டப்பட்டமை.
         (தவறான , இஸ்லாத்தின் பேரிலான சடங்குகள், சம்பிரதாயங்கள், பிரசாரங்கள் மூலம்)

இலங்கை முஸ்லிம்களின் கலாசாரப் பங்களிப்பு

இலங்கை பல்லின சமூகங்களைக்கொண்ட ஒரு நாடு என்ற வகையில் இங்கு வாழும் பல்வேறு இனக்குழுக்களும் தமக்கெனத் தனியான கலாசாரப் பாரப்பரியங்களைப் பெற்றிருப்பதைப்போலவே இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களும் தனித்துவம் மிக்க கலாசாரப்பாரம்பரியமொன்றின் சொந்தக்காரர்களாக இருந்து வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் கலாசாரப் பாரம்பரியங்கள் ஏனைய இனத்தவர்களின் கலாசார அம்சங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றன. இதற்குக் காரணம் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களில் இஸ்லாம் முதன்மையான பங்கை வகிப்பதாகும். அதாவது முஸ்லிம்களின் வாழ்க்கைத் திட்டமான (மார்க்கம்) இஸ்லாத்திலிருந்து அவர்களின் வாழ்வியல் கூறுகள் வேறுபடுத்திப் பார்க்க முடியாத வகையில்  பின்னிப் பிணைந்திருக்கின்றன.

அரேபியரின் வாணிபத்தை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற இலங்கையின் ஆரம்பகாலக் குடியேற்றங்கள் மிகப் பெரும்பாலும் கரையோர நகர்களிலேயே அமையப் பெற்றிருந்தன. இந்தக் குடியேற்றப் பகுதிகளிலெல்லாம் ஆரம்ப கால முஸ்லிம்கள் மஸ்ஜித்களோடுஇணைந்ததாகக் “குத்தாப்” எனப்பட்ட குர் ஆன் மத்ரஸாக்களை – பாடசாலைகளை நிறுவினர்.

இன்றைய சூழலில், இலங்கையில் ஆரம்பமாக நிருமாணிக்கப்பட்ட எந்தவொரு மஸ்ஜிதையும் காண்பதற்கில்லை. இன்று காணப்படும் மஸ்ஜித்களெல்லாம் பெரும்பாலும் போர்த்துக்கேய காலனியத்துக்குப் பின்னர் கட்டப்பட்டவையே.

இலங்கை முஸ்லிம்களின் கட்டடக் கலைப் பாரம்பரியமானது, மஸ்ஜித்களின் நிர்மாணத்தைத் தொடர்ந்தே ஆரம்பமாகின்றது. மிஹ்ராப், மினாரா, குப்பா, மிம்பர் முதலாம் அம்சங்கள் மஸ்ஜித் கட்டடக் கலைப் பாரம்பரியத்தின் சிறப்பம்சங்களாகும். இவற்றுள் குப்பாஎனப்பட்ட கும்மட்டம் (DOME) பிற்பட்ட காலங்களில் பிற-நாடுகளின் வெவ்வேறு வடிவங்களைப் பெற்று வளர்ந்தாலும் நம் நாட்டில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களின் குப்பாக்கள் அவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெறவில்லை. இருப்பினும் சமீப காலங்களில்நிர்மாணிக்கப்பட்டு வரும் மஸ்ஜித்களின் குப்பாக்களில் மத்திய கிழக்கு நாடுகளின் கட்டடக் கலைச் செல்வாக்கைக் காணமுடிகிறது. இற்றைக் காலங்களில் குப்பாவைப் போலவே மினாராவும் நம் நாட்டுக் கட்டடக் கலைப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுவருகின்றமையைக் காணமுடிகிறது.

மிம்பரும் மிஹ்ராபும் இலங்கை மஸ்ஜித் கட்டடக் கலைப் பாரம்பரியத்தில் முக்கிய இடம் வகிக்கும் இரு அம்சங்களாகும். பொதுவாகவே நம் நாட்டு மஸ்ஜித்கள்; உள் பள்ளி, வெளிப் பள்ளி என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். உள் பள்ளியில் தொழுகை இடம்பெறும்;வெளிப் பள்ளியில் கூட்டங்களும் மௌலிது, ராத்தீபு, புர்தா, ஹிஸ்பு, தர்பியா, முஅஸ்கர், இஜ்திமாக்கள் எனப் பல்வேறு அம்சங்களும் இடம் பெறும்.

இலங்கை முஸ்லிம்களின் கலாசார பண்பாட்டு அம்சங்களில் பாரசிக செல்வாக்கை விட அரேபிய செல்வாக்கே மிகைத்துக் காணப்படுகிறது. எனினும், சமகால சூழ்நிலையில் இத்தனித்துவ நிலையில் சரிவு ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. நம் நாட்டு முஸ்லிம்களுள்மிகப்பெரும்பான்மையினர் ஷஃபி மத்ஹப் பிரிவினரை சார்ந்தோராகவும் அஹ்லுஸ்ஸுன்னவை சார்ந்தோராகவுமே இருந்து வருகின்றனர். வணிக நோக்கில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கு வருகை தந்த அரேபியர் மிகப் பெரும்பாலும் ஷஃபி மத்ஹபைச் சார்ந்தோராய்இருந்தமை இதற்கான அடிப்படையாக இருந்திருக்க முடியும்.

19ம் நூற்றாண்டின் ஆரம்பக் கூறுகளில் இலங்கை முஸ்லிம் கட்டடக்கலைப் பாரம்பரியத்தில் மஸ்ஜிதுகளுக்கு மேலதிகமாக தக்கியா, ஸாவியா, தர்காக்கள் என்ற அம்சங்களும் சேர்ந்து கொண்டன. இக்காலப் பிரிவில் ஏற்பட்ட சூஃபித் தரீக்காக்களின் செல்வாக்கே இவைதோன்றக் காரணமாக அமைந்தன. ஷாதுலிய்யா தரீக்காவின் அனுஷ்டான மத்திய நிலையம் ஸாவியா எனவும், காதிரிய்யா தரீக்காவின் அனுஷ்டான மத்திய நுலையம் தக்கியா எனவும் அழைக்கப்பட்டன.

boosarysallih
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்