எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: December 19, 2016

கல்வி அமைச்சு: “ஆறாந்தர தமிழ் மொழியும் இலக்கியமும் புதிய பாடநூலில் ஏற்பட்டுள்ள பிழைகள் ” – கலாநிதி. கோணேசபிள்ளை

கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் எல்லா பாடப்புத்தங்களையும் புதிதாக அச்சிட்டுள்ளது. அவற்றில் தமிழ் மொழியில் ஆண்டு 06 ஆண்டு 10க்கான தமிழ் மொழி பாடநூல்களும் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய பாட நூல்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டு தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யப்படுவது வழமை. அந்த பாடநூல்களிலும் பாரிய பிழைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆனாலும் இவ்வருட மூன்றாம் தவனை முடிவில் பாடசாலைகளுக்கு புதிய பாட நூல்கள் அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே அந்தப் பிழைகள் தொடர்பாக முழுமையான தகவல்களை அறிய முடியும் என தமிழ் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டு 6க்கான தமிழ் மொழி பாடநூல் மட்டும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளன. இதனால் அதன் பிழைகளை அறியக்கூடியதாக இருந்தது என்றும் ஆண்டு 10க்கான தமிழ் மொழி பாடநூல் இன்னமும் அனுப்பி வைக்கப்படாமையினால் அதிலுள்ள பிழைகளை அறிய முடியவில்லை என்றும் இருந்தாலும் அந்த பாடநூலிலும் பாரிய பிழைகள் இருப்பதாகவும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் மொழி பாடநூல்கள் தமிழ்த்துறை சார் கல்வியாளர்களினால் தயாரிக்கப்படும் நிலையில் எவ்வாறு அந்த பாடநூலில் பிழைகள் ஏற்பட முடியும் என்றும் அதுவும் பாட நூலின் அடிப்படையே பிழைத்துள்ளது என்றும் கல்வியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முன்னைய ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களில் பிழைகள் இருந்ததை சுட்டிக்காட்டியும் இவர்கள் அதனை கவனத்தில் எடுக்கத் தவறியதன் விளைவே வெளிவரவுள்ள பாடாநூல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறாம் ஆண்டு தமிழ் மொழி பாடநூலின் பிழைகளை சுட்டிக்காட்டி எழுதியவர் —
கலாநிதி கோணாலை கோணேசபிள்ளை
Former Faculty Member, National and International Universities
Mandur, Batticaloa
இந்தப் பாடநூலின் எழுத்தாளர் குழுவில் உள்ள ஒருவர், சிரேஷ்ட விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை, மகாரகமை என்று தரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த ஆசிரியர் கலாசாலை இயங்குவதாகத் தெரியவில்லை.
இந்த நூலில் ‘தங்கம் விதைத்தால் தங்கம் விளையுமா?’ என்பதுதான் முதலாவது பாடம். இந்தப் பாடத்தின் நோக்கம் என்ன? ஆரம்பத்திலேயே ஒரு தீயவனைப் பற்றி மாணவர்கள் அறியவேண்டுமா? மூடத்தனமான சிந்தனையை  அறியவேண்டுமா?
இப்பாடத்தின் ஆரம்பம் ‘ஓர் ஊரில் பெருஞ்செல்வன் ஒருவன் இருந்தான்’. என்பதே. பாடநூலில் பெருஞ்செல்வன் என்றால் அதிக சொத்துக்களை தன்வசம் வைத்திருப்பவன் என்று தரப்பட்டுள்ளது. ஆனால் ‘செல்வன்’ என்றால் கடவுள் என்று தமிழ் அகராதி கூறுகிறது. பாட நூலில் ‘வேண்டினார்’ என்பதற்கு ‘பணிவாகக் கூறுதல்’, என்று தரப்பட்டுள்ளது. வேண்டினார் என்பது இறந்த கால வினைச் சொல்லாகும். ஆனால் ‘கூறுதல்’ அப்படியல்ல. வண்ணம் என்பதற்குப் பொருள் அழகு, விதம் என்று தரப்பட்டுள்ளது. இதற்கு நிறம் என்னும் பொருளும் உண்டு.
இந்தப் பாடம் 14 பக்கங்களைக் கொண்டது. இந்தப் பாடத்தை ஆரம்பித்து முடிப்பதற்கிடையில் மாணவர்கள் முதலிற் படித்ததை மறந்துவிட வாய்ப்புண்டு. இந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு சிறிய பாடங்கள்தான் பொருத்தமாக இருக்கும். இங்கே, உளவியலாளர் ஸ்கின்னருடைய கற்றல்  தொடர்பான கூற்றுக்களை கருததிற்கொள்வது நன்று.
ஆறாந்தர சிங்களப் புத்தகதத்தில் உள்ள முதலாம் பாடம்  நான்கு பக்கங்களில் அமைந்துள்ளதும் மற்றைய பாடங்களும் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் அமைந்துள்ளமையும் தமிழ் நூல் ஆக்கக் குழுவினரால் கவனிக்கப்பட வேண்டியவை.
இரண்டாம் பாடம் ‘எலியும் சேவலும’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது . இது ஏழு பக்கங்களைக் கொண்ட பாடம். பாடத்தில், தாய் எலி இவ்வாறு கூறுகிறது:
ஆசை மிகுந்த மைந்தா! அன்பான கண்மணியே !
மோசம் வரும் மகனே! முற்றத்திலும் போகவேண்டாம்.
பொல்லாத துட்டர் மைந்தா! புறத்தே பதுங்கி நிற்பர்
அல்லா தன புரிவார் ஐயா நீ போக வேண்டாம்

இங்கே மாணவர் மத்தியில் பயத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும் வகையிலேதான் இப்பாட்டு அமைந்திருக்கிறது.
பாடங்கள் தன்னம்பிக்;கையையும் துணிவையும் ஏற்படுத்தக் கூடியனவாக இருந்தாலேதான் இளம் சமுதாயம் தன்நம்பிக்கையுடனும் துணிவுடனும் முன்னேறும்.
ஒத்த கருத்துச் சொற்கள் என்னும் தலைப்பில் ஆலோசனை என்பதற்கு, ஒத்த கருத்துள்ள சொல், ‘கருத்து’ என்று தரப்பட்டுள்ளது. ஒத்த கருத்துச் சொற்கள் என்பதற்குப் பதிலாக ‘ஒத்த ஆலோசனைச் சொற்கள்’ என்று கூறலாமா? ஆலோசனை என்பதற்கு ‘புத்திமதி’ என்னும் சொல்லே பொருத்தமான ஒத்த கருத்துச் சொல்லாக அமையும்.  கோபம் என்பதற்கு ஒத்த கருத்துச் சொல் ‘மூர்க்கம்’ என்று தரப்பட்டுள்ளது. ‘மூர்க்கம்’ என்பதன் பொருள் ‘கொடூரம்’ என்று அகராதி கூறுகிறது. கோபம் என்பதற்கு சினம், சீற்றம் ஆகியன ஒத்த கருத்துச் சொற்களாகும்.
மூன்றாம் பாடம் ‘ஏமாந்த நாய்’. இது நாயின் ஏமாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த பாடத்தின் மூலமாக மாணவர்களிடத்தில் ஒரு தோல்வி மனப்பாங்கையே வளர்க்க முயல்கிறோம்.
நாலாம் பாடம் ‘குரங்குச் சேட்டை’. இங்கே குரங்கு செய்யும் சேட்டையும் அது படும் துன்பமும் சித்தரிக்ப்படுகிறது. இப் பாடத்தினூடாக மாணவர்கள் நல்ல செயல்களை அல்லாது தீய செயல்களையே சிந்திக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இந்தப் பாடத்தில் ‘ஈறு’ என்னும் சொல்லுக்கு எதிர்கருத்துச் சொல் ‘கடைசி’ என்று தரப்பட்டுள்ளது. ஆனால் இது அகராதியின்படி ஒத்த கருத்துள்ள சொல்.
ஐந்தாம் பாடம் ‘தந்தை மகனுக்கு எழுதிய கடிதம’;. இதில் ‘அங்கு உன்னுடைய நலத்தையும் உன் நண்பன் நலத்;தையும் அறிய விழைகிறேன்’ என்று தரப்பட்டுள்ளது. ஆனால் விழைகிறேன் என்பதற்கு ‘ஏதேனும் விடயம் பற்றிக் கூற விரும்புகிறேன்’ என்று அரும்பதங்கள் என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ளது. இங்கு ‘ஏதேனும் விடயம் பற்றி அறிய விரும்புகிறேன்’ என்பதுவே பொருத்தமாக இருக்கும். தேர்வு என்பதற்று மாணவர்களுக்கு நடத்தப்படும் பரீட்சை என்று தரப்பட்டுள்ளது. தேர்வு என்பது மாணவர்களுக்கு மாத்திரம் நடத்தப் படுவதில்லை. ஆசிரியர்களுக்கும் பரீட்சை நடத்தப் படுகிறது. பணியிற் சேர்ப்பதற்கும் பல பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. பாடத்தில் ‘நூற்றுக்கணக்கில்’ என்று தரப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சியில் ‘நூற்றுக்கணக்கு’ என்று தரப்பட்டுள்ளது. இரண்டும் வௌ;வேறான எண்ணக் கருக்களாகும். நூற்றுக்கணக்கில் என்றால பலர் என்று பொருள்படும். ‘நூற்றுக்கணக்கு’ என்றால் நூற்றினை அடிப்படையாகக் கொண்ட கணக்கு என்பதாகும்.
ஆறாம் பாடம் ‘பறவைகள் பலவிதம்’. என்பதாகும். பறவைகள் மாத்திரமா பலவிதம்? தாவரங்கள் பலவிதம், மிருகங்கள் ப்லவிதம், மனிதர்கள் பலவிதம் என்று கூறிக்;கொண்டே போகலாம். தலைப்பை ‘பலவிதமான பறவைகள்’ என்றிருந்தால் கற்போருக்கு தெளிவான எண்ணக்கரு ஏற்பட வாய்ப்புண்டு.
இந்தப் பாடத்தில் ‘அறிவண்ணன்’ என்றொரு பாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவரை மற்றைய பாத்திரங்கள் ‘அண்ணா’ என்று அழைக்கின்றனர்.
‘தேன்மொழி: அதுவரை நாங்கள் இந்த பறவைகளைப்பற்றியே அண்ணாவிடம் ஏதும் பிடுங்கலாம்’. என்று ஒரு கூற்று இப் பாடத்தில் உண்டு
‘பிடுங்காலம்’ என்னும் பேச்சு வழக்கு, பொருள், பணம் சார்ந்ததாகவே கையாளப்படுகிறது. அறிவு சார்ந்த வகையில் கையாளப்படுவதாகத் தெரியவில்லை.
அறிவண்ணன் பறவைக்கு எத்தனை கால்? என்ற கேள்வியைக் கேட்கிறார். இக்கேள்வியில் இருந்து பல கோடி ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த உயிரினங்களின் நிலைக்குப் போக முயல்கிறார். ஆய்வு விஞ்ஞானிகளே பரிணாம வளர்ச்கியையிட்டு விவாதிக்துக் கொண்டிருக்கும்போது இந்த பத்துவயது மாணவர்களுக்கு இந்த உரையாடல் பொருந்துமா?
பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆழமான ஆய்வுகள் தொடர்பான முடிபுகளை ‘அண்ணா’ என்ற கதாபாத்திரத்தின் ஊடாகக் கூறப்படுகிறது. இது யதார்த்தமானதா?
இதே பாடத்தில், ‘ஞானி’ என்பதன் பொருள் ‘முற்றும் துறந்தவர்’ எனத் தரப்பட்டுள்ளது. ஞானம் என்பதில் இருந்து ஞானி வருவதால், இதற்கு சிறந்த அறிவு உடையவர் என்பதே பொருத்தமான பொருளாகும். அகராதி, பேரறிவாளன், நான்முகன் என்று பொருள் தருகிறது. முனிவரை அல்லது துறவியை முற்றும் துறந்தவர் என்று கூறலாம்.
அறிவண்ணன், என்னைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தில் எல்லாமே அழகுதான். அழகும் அழகின்;மையும் பார்ப்பவர் கண்களைப் பொறுத்தது என்று கூறுகிறார். இது முற்றும் துறந்த முனிவரின் கூற்றாக அமையலாமே தவிர சாதாரண மனிதனால் கூறக் கூடியதல்;ல. ஆனால் பறவைகளில் ஆண்கள் பெண்களிலும் அழகானவை என்று உயிரியல் கூறுகிறது.
பரிணாம வளர்ச்சி ;தொடர்பாக விளக்கிய ‘அண்ணா’ ‘இறைவன் படைப்பில் எல்லாமே அழகானவை என்பதை நம்ப மறுப்பவன் – கடவுளை இல்லையென்பவன் நாத்திகன்’ என்று கூறுகிறார்.
இறைவன் படைப்பில் எல்லாமே அழகானவை என்பதை நம்புவதற்கும் கடவுள் இல்லை என்று நம்புவதற்கும் தொடர்புண்டா? அழகானவையும் அழகில்லாதவையும் உண்டு என்று நம்புபவன் கடவுளை நம்பலாம் அல்லவா? கடவுளை நம்பும் மனதர்கள் எதையோ பார்த்து இது அழகாயில்லை என்று கூறவில்லையா?
நாத்திகன் என்பதற்குப் பொருள் ‘கடவுள் இல்லை என்பவன்’ என்றும் ஆத்திகன் என்பதற்குப் பொருள் ‘கடவுள் நம்பிக்கை உள்ளவன்’; என்றும் தரப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என்பவன் நாத்திகன்; ;என்றால் கடவுன் உண்டு என்பவன் ஆத்திகன் என்பதுதான் தர்க்கரீதியான கூற்றாக அமையும். ஆத்திகன் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருப்பின் நாத்திகன் என்பது கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என அமைதல் நன்று. ஆனால் இவையெல்லாம் இந்த வகுப்பு மாணவர்களுக்கு அதாவது பத்து வயது மாணவரகளுக்கு அப்பாற்பட்ட எண்ணக்கருக்களாகும்.  இவைகளை இலக்கிய பாடத்தில் இணைத்து இந்த இளம் மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாமா?
ஏழாம் பாடத்தின் தலைப்பு ‘அழ.வள்ளியப்பாவின் பாடல்’ ஆகும். புதுவகைப் பாடல் என்னும் உப தலைப்பில் நான்னு வரிகள் தரப்பட்டுள்ளன.
தா தா தா தா தா தா தா தா தா தா க்குத் தண்ணீர் தாரான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆக்கும் உதவான்; கொள்ளை
லா லா லா லா லா லா லா லா லா லா லாக்குப் பொருளை விற்பான்
பா பா பா பா பா பா பா பா பா பா  பாக்கே ஆளாவானே
இதில் மாணவர்களுக்கு இலக்கிய சுவை ஏற்படுவதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
மொழித்திறப்பாடல் என்னும் தலைப்பில் நான்கு பாடல்கள் தரப்பட்டுள்ளன.
சந்தைக்குப் போனேன் சந்தைக்குப் போனேன்
சாம்பல் பூசணி வாங்கிடவே
சண்டைக்குப் போனேன் சண்டைக்குப் போனேன்
தாய்த் திருநாட்டைக் காத்திடவே

இதில் என்ன மொழித்திறன் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் மாணவர்களுக்கு சண்டையைப் பற்றி ஞாபகம் ஊட்டுவதாக இப்பாடல் அமையலாம்.
அரும் பதங்கள் என்னும் தலைப்பில்
சந்தை – சமையலுக்குத் தேவையான பொருட்கள் நிறைந்த இடம் (காய்கறி, மீன், பழங்கள், கீரைகள்)
வெல்லம் – சீனி

கொள்ளை – ஒருவனின் உடமைகளை அபகரித்தல் என்று தரப்பட்டுள்ளன.
சந்;தை என்பது உணவுக்கும் உபயோகத்துக்கும் தேவையான பொருள்களை விற்பனைசெய்யும் இடம் என்று கூறினால் விளக்கம் தெளிவாக அமையும். பொருள்கள் இங்கு விற்கப்படுகின்றன என்பதுதான் முக்கியமானது. பொருள்கள் நிறைந்திருப்பதல்லாது, பொருள்கள் குறைவாகவும் இருக்கலாம். ஆனால் அவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாக கிரகிக்கப்படல் வேண்டும். பொருள் 10 கள் இயல்புப் புணர்ச்சி. எனவே பொருள்கள் தான் சரியானது. மற்றைய பாட நூல்களில் மாத்திரமல்ல இந்தப் பாட நூலிலும் 100ஆம் பக்கத்தில்’பொருள்கள்’என்று தரப்பட்டுள்ளதும் நோக்கப்படல்; வேண்டியது.
வெல்லம் என்பது சீனி என்று தரப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் வேறு வேறானவை. இந்தியாவில் சீனியைச் சர்க்கரை என்று அழைப்பர்.
கொள்ளை என்பது ஒருவனின் உடமைகளை அபகரித்தல் என்று தரப்பட்டுள்ளது. இதை, தனக்குச் சொந்தமில்லாதவற்றை அபகரித்தல் என்று தருவது தெளிவான பொருளைத்தரும்.
அணிற் பாடல்; என்ற தலைப்பில்
மூன்று கோடு முதுகிலே
முன்பு ராமர் தந்ததோ?
நான்கு முகத்துக் பிரமனால்

நன்கு படைக்கப்ப பட்டதோ? என்று ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடநூல் இலங்கையில் உள்ள சகல மதத்தவர்களின் உபயோகத்துக்காக அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. எனவே இவ்வாறான ஒரு மதம் சார்ந்த கூற்றுக்களைத் தவிர்ப்பது நல்லது.
எட்டாம் பாடம் ‘மூட ஆமை’. ஏற்கனவே நீண்ட இரு பாடல்களைப் படித்த மாணவர்களுக்கு இன்னுமோர் மிக நீண்ட பாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் மேலும் மூடச்செயல்களையே மாணவர் அறியவேண்டுமா? என்ற வினா எழுகிறது.
ஒன்பதாம் பாடமும் பாடல் சார்ந்ததே. ‘கும்மி பெரும்பாலும் பெண்களுக்கே உரிய கிராமியக் கலைவடிவம். பெண்கள் வட்ட வடிவமாய்க் கூடி நின்று கைகொட்டி ஆடுவது கும்மி என்று சொல்லப்படும்.’ என்று கூறிய பின் ‘கும்மியடிக்கும்போது ஒரு குத்து விளக்கையோ கிருஷ்ணக்கடவுளின் சிலையையோ நடுவில வைத்து அதைச் சுற்றிப் பல பெண்கள் பாடிக்கொண்டும் கையில் தாளம் தட்டிக்கொண்டும் குனிந்து நிமிர்ந்து ஆடுவர்’ என்றும்  கூறப்படுகிறது. இரண்டாம் பகுதியைத் தவிர்திருக்கலாம். இது இவ்வாறு பொதுவாக எங்கும் நடைபெறுவதில்லை.
பத்தாம் பாடம் புதிய ஆத்திசூடி. ‘எத்தனையோ ஒளவையார்கள்pல் ஒரு ஒளவையார் செய்ததே ஆத்தி சூடி.’ என்பதைப் பார்க்கிலும் பல ஒளவையார்களில் ஒரு ஒளவையார் செய்ததே ஆத்திசூடி என்று தருவதே சரியான எண்ணக்கருவை ஏற்படுத்தும். ‘எத்தனையோ’ என்று கூறும்போது எண்ணில் அடங்காதவை என்னும் எண்ணக்கரு ஏற்படுகிறது.
புதிய ஆத்திசூடி இந்தப் பருவ பிள்;;ளைகளுக்கு அறிமுக்ப்படுத்தக் கூடியதா என்றும் இதனால் பயன் உண்டா என்றும் கல்வியியலாளர் சிந்திக்க வேண்டும்.
கிரகித்தல் பயிற்சி என்னும் தலைப்பில்
இதில் காணப்படுடம் அறக் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக என்று தரப்பட்டுள்ளது. இந்தப் பருவப் பிள்;ளைகளுக்கு ‘அறம்’ என்பதன் சரியான எண்ணக்கரு ஏற்பட்டிருக்குமா?
‘உமக்குப் பிடித்த பத்து ஆத்திசூடி அடிகளுக்குக் காரணம் கூறுக’ இந்த நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு இது பொருத்தமான வினாவா என்பது சிந்திக்கப் படவேண்டியது?
ஆத்திசூடி எனப் பெயர்வரக் காரணம் யாது? என்னும் கேள்விக்கு பாடத்தில் தந்துள்ள காரணம் ‘ஆத்தி மலர்மாலையை அணிந்தவர் சிவபெருமான் சிவனைப் போற்றியே ஆத்திசூடி எனப் பெயரிட்டார் ஒளவையார் என்று ஒரு சிலரும் ஆத்தி மலர் மாலையை அணிந்தவர்கள் சோழ மன்னர்கள் என்பதால் சோழ மன்னரைக் குறிப்பிடுவதற்கென ‘ஆத்திசூடி’ என்று பெயர் வந்தது என்று ஒரு சாராரும் கூறுவர்.’ என்பதாகும்.
சிவனைப் போற்றிப் பாடப்பட்ட பாடலை மற்;றைய மதப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது ஏற்புடையதா?
இந்தப் பாடத்தில் தரப்பட்டுள்ள பரம்பொருள் வாழ்த்தில் வரும் ‘கருநிறங் கொண்டு பாற் கடல்மிசை கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்’ என்பதை கவிஞர் புரட்சிக்கமால் மறுத்து எழுதியது கவனிக்கத்தக்கது. எனவே பல மதத்தவர்கள் படிக்கும் பாட நூலில் மதம் சார்ந்த கருத்துக்களை தவிர்ப்பது மிக முக்கியமாகும். எனவே பரம்பொருள் வாழ்த்தைத் தவிர்;த்து புதிய ஆத்திசூடியில் மாணவர்கள் இலகுவாக விளங்கக்கூடிய சில அடிகளைத் தரலாம்.
11ஆம் பாடம் ‘கண்ணகி வழக்குரைத்தல்’. இது களவு, கொலை, இறப்பு ஆகிய பல துக்கமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பாடம். இந்த இளம் மாணவர்களுக்கு இவ்வாறான துக்கரமான நிகழ்வுகளைக் கற்பிக்கலாமா? இதைக் கற்பிப்பதன் நோக்கம் என்ன?
12ஆம் பாடம ’செய்தித் தாள்’. இதில் உள்ள முதலாம் வசனம் ‘அறிவியல் வளர்ச்சியினால் இன்று உலகமே சுருங்கி இருக்கிறது.’ ‘உலகமே சுருங்கி இருக்கிறது’ என்பது வெளிப்படுத்தும் உட்பொருளை இந்தப் பருவ மாணவர்கள் உணரும் நிலையில் உள்ளார்களா?
செய்தித்தாள் இத்தாலியிலும் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் முதல் வெளிவந்த செய்தி உணடு. முதலாவதாக வெளிவந்த தமிழ் செய்தித்தாள் பற்றிய செய்தி இல்லை.  நமது நாட்டில் எப்போது முதல் முதல் செய்தித்தாள் வெளிவந்தது என்ற செய்தியும் இல்லை. கற்றல்-கற்பித்தலில் ஒரு முக்கிய முறை, தெரிந்ததில் இருந்து தெரியாததற்குச் செல்லுதலாகும். மாணவர்களுக்கு நன்கு பரிச்கியமான, இலங்;கையில் இருந்து இப்போது வெளிவரும் செய்தித்தாள்களில் இருந்து இந்தப் பாடம் கட்டி எழுப்பப்பட்டால் மாணவர்களின்; ஆர்வத்தைத் தூண்;ட வாய்ப்புண்டு.
‘தாய்மொழியில் வெளியாகும் செய்தித்தாளோடு ஆங்கில செய்தித்தாளையும் வாங்கிப் படிக்கும் பழக்கம் பெரும்பாலாரிடம் உள்ளது.’ என்று ஒரு கூற்று உண்டு. இது எந்த நாட்டவரைக் குறிக்கிறது? இலங்கை நாட்டவர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலப் பத்திரிகையை வாசித்து விளங்கும் ஆற்றல் இல்லை. இந்தியாவிலும் இதே நிலைமைதான். சீனா, யப்பான் போன்ற நாடுகளில் மிக மிகக் குறைவானவர்களே ஆங்கில பத்திரிகையைப் படிப்பர். ஆங்கிலப் பத்திரிகையை மாத்திரம் படிப்பவர்கள் உலகளாவிய ரீதியில் பலர் உண்டு.
13ஆம் பாடம் ‘செய்நன்றி அறிதல்’. இந்தப்பாடத்தில் திருவள்ளுவர் படம் இடம்பெறுகிறது. திருவள்ளுவர் திருநீறு பூசி இருந்ததற்கு ஆதாரம் உண்டா?
இந்தப் பாடத்தின் முதலாவது வாக்;கியம் ‘தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை செய்நன்றி என்ப்படும்’. என அமைந்துள்ளது. ஆனால் செய்நன்றி பிறர் தமக்குச் ;செய்த நன்றியேதான். இதனுள் ‘மறவாமை’ இல்லை ஏனெனில்
‘நன்றி மறப்பது நன்றன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று’ என்னும் குறலில் ‘நன்றி மறப்பது’ என்று தரப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்தின் முடிவில் ‘திருக்குறள் பற்றிய பேச்சொன்;;றை எழுதிக்காட்டுக’ என்னும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. பத்து குறள்களைப் படித்த ஆறாந்தர பத்துவயது மாணவர்கள்; 1330 குறள்களைக் கொண்ட நூலைபபற்றி கட்டுரை எழுத ஆயத்தமாய் இருப்பார்களா?
14 ஆம் பாடம் ‘சேர் ஐசாக் நியூற்றன்’ 
ஆங்கிலத்தில் Sir Isaac Newton என்பதை சேர் ஐசாக் நியுட்டன் என்று எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். வேற்று மொழிப் பெயர்களை தமிழில் எழுதும்போது பெருமளவு அதே உச்சரிப்பு வரும் வண்ணம் எழுதுவதுதான் நன்று என்று 1964 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் கூட்டப்பட்ட கணித விஞ்ஞான எழுத்தாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்;;ப்பட்டமை இங்கு கருத்திற்கொள்ளத்தக்கது.

‘இங்கிலாந்தில் ஊல்ஸ்தோப் என்னும் கிராமத்தில் அப்பிள் மரங்கள் நிறைந்த தோட்ட மொன்று இருந்தது. அக்கிராமத்தில் வசித்த ஆங்கில இளைஞன் ஒருவன் ;ஒருநாள் அத்தோட்டத்தின் மர நிழலில் அமர்ந்து சிந்தனையில்; மூழ்கி இருந்தான். அப்பொழுது அப்பிள் பழமொன்று அவனருகில் விழுந்தது. பழுத்த அப்பிள்; பழங்கள் இவ்வாறு விழுவதை அவன் முன்னரும் பல முறை பாரத்திருக்கிறான். ஆனால் இன்று அது அவனுடைய ஆழ்ந்த சிந்தiனையைத் தூண்டியது’. என்று இப்பாடம் ஆரம்பிக்கிறது.
ஆனால்; நியுட்டன் தனது தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும்போது மரத்தில்; ;இருந்து அப்பிள் விழுவதைக்; கண்டு முதன் முதல் புவியீர்ப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபட்டார் என்று வோல்ரையர் எழுதியுள்ளார்
Voltaire wrote in his Essay on Epic Poetry (1727), “Sir Isaac Newton walking in his gardens, had the first thought of his system of gravitation, upon seeing an apple falling from a tree.
‘ஒரு நாள் மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது கண்துஞ்சாது தமது பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது உணவு மேசையிலேஉண்ணப்படாமலே இருந்தது. உணவை உண்ணாது அவர் கருமமே கண்ணாய் இருந்தார்.  அங்கே வந்த நியூற்றனின் நண்பர் ஒருவர் குறும்பு செய்ய எண்ணி, உணவைத் தாமே உண்டு வெறும் பாத்திரங்களை விட்டுச் சென்றார்.’ என்று பாடததிலே தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்கி நியுட்டனது வரலாற்றில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. நியுட்டன் தனது நண்பர்களில் ஒருவரை உணவருந்த அழைத்தார் ஆனால்  அவர் இதைத் தனது உணவு பரிமாறுபவரிடம் கூற மறந்து விட்டார். குறித்த நேரத்தில் உணவருந்த நண்பர் பரிசோதனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நியுட்டனின் கவனத்தைக் குலைக்க விரும்பாது பரிமாறப்பட்டிருந்த உணவை உண்டுவிட்டுச் சென்றுவிட்டார். பல மணித்தியாலத்தின் பின்னர் பசியை உணர்ந்த நியுட்டன் உணவருந்தச் சென்றபோது உணவு  உண்ணப் பட்டிருந்த நிலையைக் கண்டு தான் ஏற்கனவே உணவருந்தியதை மறந்து விட்டதாக எண்ணி மீண்டும் தனது ஆய்வைத் தொடர்ந்தாராம். சில நாட்களின் பின் தனது நண்பர் அன்று நிகழ்ந்தவற்;;றைக் கூறியபோது நியுட்டன் ஆச்சரியப்பட்டாராம்.
நியுட்டனின் நண்பன் குறும்பு செய்ய எண்ணி, ஆய்வில் ஈடுபட்டிருந்;த நியுட்டனின் உணவை உண்டார் என்பது நாகரீகமான செயல் அல்ல. இது நம்ப முடியாத செயலாகும். ஆங்கில நாகரீகத்தில் இப்படியான செயல் நடபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. நியுட்டன் பல்கலைக்கழக பேராசிரியர். தலைசிறந்த விஞ்ஞானி. கணிதமேதை. இவ்வாறான பல்துறை மேதை, ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது இவரது உணவை நண்பர்; குறும்பு செய்ய உண்டுவிட்;டுச் சென்றுவிட்டார் என்று அகூறுவதற்குக் கூச்சம் வரவில்லையா? இப்படியான தவறான நிகழ்ச்சிகளை இளம் மாணவர்களுக்குக் கற்பிக்கலாமா?
இந்தப் பாடத்தின் முடிவில் தரப்பட்டுள்ள கிரகித்தல் பயிற்சியில்
நியூற்றன் எங்கே வாழ்ந்தார்? என்ற கேள்வி தரப்பட்டுள்ளது. இக்கேள்விக்கு, நியுட்டன் இங்கிலாந்திலே வாழ்ந்தார் என்றும் கூறலாம் அல்லது ஊல்ஸ்தோப்பிலும், பாட்டியின் வீட்டிலும் கேம்பிறிஞ் பல்கலைக்கழகத்திலும் லண்டனிலும் வாழ்ந்தார் என்றும் கூறலாம்.
சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உண்டு என்பதை எவ்வாறு கண்டுபிடித்துக் காட்டினார்? என்னும் கேள்விக்கு பாடநூலில் ‘இருட்டறையினுட் சூரிய ஒளிக்கற்றையை சிறு துவாரம் வழியாகப் புகவிட்டுப்பல பரசோதனைகள் செய்தார். அவற்றால் சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உண்டு என்பதைக்; ;காட்டினார்’ என்று தரப்பட்ட  விடையையே மாணவர்கள் கொடுப்பார்கள். ஆனால் நியுட்டன், சூரிய ஒளியை அரியத்தினூடாகச் செலுத்தியே இதில் உள்ள ஏழு நிறங்களைக் காட்டினார்.
நியுட்டன் முதலில் எதனைக் கண்டுபிடித்தார்? என்ற கேள்விக்கு பாடத்தில் உள்ள விடை புவியீர்ப்பு ஆகும். ஆனால் அவர் மாணவனாய் இருக்கும்போது 1665இல் ஈருறுப்புத் தேற்றத்தைக்(binomial theorem) கண்டுபிடித்தார். இதன் பின் பட்டம் பெற்றார். தொற்று நோயின் நிமித்தம் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படதால் தனது கிராமத்துக்குச்; ;;சென்றார். கிராமத்தில் வாழும்போதுதான் புவியீர்ப்பு பற்றிய சிந்தனையும் ஆய்வும் ஆரம்பித்;தன.
In 1665, he discovered the generalised binomial theoremand began to develop a mathematical theory that later became infinitesimal calculus. Soon after Newton had obtained his degree in August 1665, the university temporarily closed as a precaution against the Great Plague.
இந்தப் பாடம் முழுமையடைவற்குப் பின்வருவனவற்றையயும் சேர்க்கலாம்
நியுட்டன் விஞ்ஞானி மாத்திரமல்ல கணித மேதையுமாகும் பல கணித உண்;மைகளைக் கண்டுபிடித்துள்ளார். இவர் கேம்பிறிஞ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராவே பணியாற்றினார். மேலும் இவர் பல்கலைக்கழக பேராசிரியர் மாத்திரமல்லாது பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவரது திறமையை உணர்ந்த பிரித்தானய மன்னர், பிரிதானியாவின் நாணய சாலையின் தலைவராக இவரை நியமித்தார். அப்போது பணம் தங்க, வெள்ளி நாணயங்களாவே புளக்கத்தில் இருந்தது. நாணயங்கள் சில சிறிதாக வருவதை அவதானித்த நியுட்டன் நாணயங்களின் விளிம்பைச் சுற்றி வெட்டுகள் இடும் முறையை அறிமுகம் செய்தார். இந்த அறிமுகத்தால் நாணயங்கள் உருவில் மாற்றம் அடையும் தன்மை நிறுத்தப்பட்டது.
சேர் ஐசாக் நியுட்டன் தற்பெருமையற்ற பெருமகனாக வாழ்ந்தார். தான் பல புதியவற்றைக் கண்டுபிடித்தாலும் தனக்கு முந்தி வாழ்ந்;த அறிஞர்களின் பங்களிப்பினாலேதான் தன்னால் இவைகளைச் செய்ய முடிந்;தது என்று நம்பினார். இதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது அவரின்; ஒரு கூற்று. ‘நான் ராட்சதர்களின் தொளில் நிற்பதினாலேதான் என்னால் மேலும் பலவற்;றைப் பார்க்க முடிகிறது’. மேலும்; அவர் தன்;னைப் பற்றிக் கூறும்போது ‘நான் உலகுக்கு எவ்வாறு தோற்றமளிப்பனோ தெயாயது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், கடற்கரையில் விளையாடும் சிறுவன்; நான்;. அடிக்கடி விளையாட்டில் இருந்து திசை திரும்பி மிருதுவான கல்த்துண்டையோ அல்லது சாதாரணமானது அல்லாத அழகான சிப்பியையோ கண்டுபிடிக்கிறேன். ஆனால் உண்மையெனும் சமுத்திரம் கண்டுபிடிக்கப்படாமல் என் முன்னே இருக்கிறது’.
தலைசிறந்த விஞ்ஞானியாகவும் கணித மேதையாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரித்தானிய நாணயசாலையின் தலைவராகவும் பெரும் பணியாற்றிய சேர் ஐசாக் நியுட்டன் தமது 84ஆவது வயதில் 1721ஆம் ஆண்டு மார்ச்மாதம் 20ஆம் தேதி உயிர் நீத்தார்.
15ஆம் பாடம் ‘புகழ்ச்சி இகழ்ச்சியை அளித்த கதை’ ஆகும். இப் பாடத்தில் ‘அவன் அவ்வூரில் இருந்த பெரும் புலவர் ஒருவரிடம் திருக்குறன், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பல நூல்களைப் படித்துக்கொண்டான். அதனால் அவனுக்கு அறிவு மிகுதிப்பட்டது. ஆயினும் பிற இலக்கியங்களையும் இலக்கணத்தையும் கற்காதபடியால் ஊரார்கள் மழவராயனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை’. என்று தரப்பட்டுள்ளது. ‘மிகுதிப்பட்டது’ என்பது அரும்பதங்கள் பகுதியில் விளங்கப் படுத்தப்படவில்லை. அகராதியிலும் இச்சொல் காணப்படவில்லை. பல நூல்களைப் படித்தவனை மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றால், இது யாரின் குற்றம். இவ்வாறு படித்தவனை மதிக்காத சமுதாயத்தைப் பற்றி விதந்து உரைப்பது மாணவர்களுக்குப் பயன் தருமா?
16ஆம் பாடம் ‘ஈசலும் புற்றும்’ என்பதாகும். எத்தனை மாணவர்களுக்கு புற்றையும் அதில் வாழும் கறையானையும் காணும் வாய்ப்புண்டு. இந்த யதார்த்தம் அற்ற உரையாடலால் மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுமா?
17ஆம் பாடம் ‘ஒழுக்கம் உயர்வளிக்கும்’ என்பதாகும்.
இந்தப் பாடத்தில் பைபிளில் பத்துக் கட்டளைகள் இருப்பதுபோல திருக்குறளில் பத்துக் கட்டளைகள் இருக்கின்றன. இவை பத்தும் ஒழுக்கத்தைப் பெற துணை செய்வன, அவை
‘பொய்யைச்; ;சொல்லாதே, புலாலை உண்ணாதே
கள்ளைக் குடியாதே, களவை நினையாதே
காமம் கொள்ளாதே, சிற்றினம் சேராதே
புறங் கூறாதே, பொறாமை யடையாதே’

என்று தரப்பட்டுள்ளது. முதலில் பைபிளில் உள்ள பத்துக் கட்டளைகளையும் மாணவர்கள்; அறிய முனைவார்கள். இது சமயம் சார்ந்த செயலாகி விடும். இங்கு கூறப்பட்டுள்ளவை இந்த வகுப்பு மாணவர்கள் நடைமுறைப் படுத்தக் கூடியனவா? புலால் உண்ணாத மாணவர்கள் எத்தனைபேர் வகுப்பில் இருப்பார்கள்? காமம் கொள்ளாதே என்பது இந்த வகுப்பு மாணவர்களுக்கு விளங்குமா? செய்யக் கூடியவைகளையே கற்பித்தல் வேண்டும் என்று கல்வியலாளர்கள் கூறுவார்கள். இவ்வாறான எதிர்மறையான கட்டளைகள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தியதாகப் புலப்;படவில்;லை. இவைகளைப் பாடநூல்களில் சேர்ப்பதால் பயன் இருப்பதாவும் தெரியவில்;லை.
18ஆம் பாடம் ‘மரங்கள் வாழ்க! மாநிலம் வாழ்க!’ என்பதாகும். ‘மரம் செடி கொடி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியவேண்டியதே. ஆனால் இதில் வரும் ‘மரஞ்செடி கொடியால் மண்ணில்; வாழ்வு மனிதர்கள் இதனை உணர்வது அறிவு’ என்பது கிரகித்தல் பயிற்சியில் வரும் ‘எதனை உணர்வது அறிவு?’ என்னும் வினாவுக்கு விடையாக கருதப்படும். இதனால் அறிவு என்றால்; என்ன? என்பதற்கு மாணவர்கள் இந்த விடையைக் கூறும் நிலை உருவாகலாம்;. அறஞ்செயல், தாழ்வில்லாத தருமம், தானமும் தவமும் ஆகிய சொற் தொடர்கள் மாணவர்களால் கிரகிக்கக் கூடியவையா என்பது சிந்திக்கப்படல் வேண்டியது. இப் பாடத்தில் தரப்பட்டுள்ள குறிப்புரையும் இந்த வகுப்பு மாணவர்களில் அறிவு விருத்தி நிலைக்கு அப்பாற் பட்டவையே. ‘ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்’, ‘துணிவுடன் வெளியிட்டுப் பரப்பியவர’;, ‘வ.உ.சிதம்பரனார் நிறுவிய சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றியவர்’, ‘சிதம்பரனாரோடு சிறை சென்றவர்;’ போன்ற கூற்றுக்கள் தொடர்பான எண்ணக்கருக்களைப்; பெறும் நிலையில் இந்த வகுப்பு மாணவரகள் உள்ளனரா? ‘பரலி சு.நெல்லையப்பர் பாரதியாரின் புகழை உலகறியச் செய்தவர்’ என்றும் தரப்பட்டுள்ளது. ஆனால் பாரதியாரின்; புகழைப் பரப்பியவர் சுவாமி விபுலாநந்தர் என்று கூறப்படுகிறது. சுவாமி 1931ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியபோது பாரதியாரின்; படைப்புகளின்; பெருமையை இந்தியா எங்கும் எடுத்துலைத்தார். இலங்கையிலும் பாரதியார் படைப்புகளின் சிறப்புப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
19ஆம் பாடம் ‘குறும்பா’. இந்தப் பாக்கள் கூறும் செய்திகள் எவை? இந்த துக்ககரமான செய்திகளை மகிழ்வோடு வாழவேண்டிய மாணவர்களுக்குத் திணிக்கவேண்டுமா?
20ஆம் பாடம் ‘கம்பரிற் பாலர் கல்வி’ என்பதாகும். இந்தத் தலைப்;பு கம்பராமாயணத்தில் பாலர் கல்வி என்றிருந்தால் மாணவர்களுக்கு இலகுவில் விளங்கக் கூடியத்hக இருக்கும்.
இந்தக் கட்டுரை இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது. இது இளம் பிள்ளைகளுக்காக எழுதப்படவில்லை. இதில் தரப்பட்டுள்ள நிகழ்ச்சிகளும் பாடல்களும் இந்த வகுப்புப் பிள்ளைகளுக்கு சரியான விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவையல்ல. மிக மிக பச்சையான பாலகர்கள்; நகரத்தைக் கடந்து நாட்டைக் கடந்து படிக்க காட்டுக்கு நடந்து செல்கிறார்கள். இவர்கள் சாதாரண மக்களின் பிள்;;;;;;;ளைகள் அல்ல மன்னனின் மக்கள். காட்டில் உள்ள பாலர் பாடசாலை யானது பின்னால் பல்கலைக்கழகமாகிறது. இவையெல்;லாம் இந்த வகுப்பு மாணவர்களுக்கு தெளிவான அறிவைக் கொடுக்குமா?
‘இவள் ஒரு பெண்ணாயிற்றே! இவள்மேலே யோசனையின்றித் திடீரென்று அணுக்குண்டுப் பிரயோகம் செய்யலாமா?’ என்று ஒரு கூற்று உண்டு. அணுக்குண்டு என்பதை இந்த மாணவர்களால் விளங்க முடியுமா? கற்பிக்கும் ஆசிரியராற்கூட விளக்;கமுடியுமா?
‘அஃதைய நிலையெம் தரசென உடையேம்
இஃதொரு பொருளல எமதுயி ருடன்ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்

உருபகல் அளவென உரைநனி பகர்வார்’ என்னும் பாட்டும் இப்பாடத்தில உண்டு. இந்தப் பாட்டை இந்த வகுப்பு மாணவர்களுக்குத் திணிக்கலாமா?
கிரகித்தல் பயிற்சியில் ‘இராமன் எதிர்கொண்ட வாய்மொழிப் பரீட்சை யாது?’ என்றொரு கேள்வி உண்டு. இதற்கு பாடத்தில் உள்ள விடை ‘ஏ இராமா! நீ; காட்டை ஆள், உன் தம்பி பரதன் நாட்டை ஆளட்டும். இது உன் தந்தையின் விருப்பம்’.  இந்த வகுப்பு மாணவர்கள் இதைப் பரீட்சையாக உணர்;வார்களா?
முடிவுரை
இலங்கையில் உபயோகப்படுத்தும் தமிழ் மொழியும் இலக்கியமும் என்னும் பாடநூல்கள் பல மதத்தவர்களாலும் கற்கப்படுகிறது. எனவே இது மதச் சாரபற்றதாக அமைதல் வேண்டும்.
ஒவ்வொரு தரத்துக்கும் தயாரிக்கப்படும் நூல்கள் அந்தந்தத் தரத்தில் கற்போர்களின் வளர்ச்சிப்படி, சிந்தனை விருத்தி நிலை, எண்ணக்கரு விருத்தி, சொற்களஞசிய விருத்தி, முன் அனுபவம் ஆகியவறை அடிப்படையாகக் ;கொண்டிருத்தல் வேண்டும்.
பாடங்கள் மாணவர்களின் திறமைகளையும் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சிகரமான சிந்;த்னையையும் வளர்ப்பதற்கு உதவவேண்டும். இலக்கிய சுவையை விருத்தி செய்தல் வேண்டும்.
வாக்கியங்களின் பின்னணியில் தீட்டப்படும் ;;;நிறங்கள் வாசிப்போருக்கு உதவியாக இருத்தல் வேண்டும். கிரகித்தல்; பயிற்சி நீல நிறத்துக்கு மேல் நீலநிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.சிவப்பும் சிவப்பு சார்ந்த நிறங்களும் கண்ணுக்குத் துன்பத்ததைக் கொடுகக் கூடியன என்;று கண் வைத்தியர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால் இந்த பாடநூலில் சிவப்பும் சிவப்பு சார்ந்த நிறங்களும் மிக மிகிந்து காணப்படுகிந்நன.
இந்த ஆறாந்தர பாடநூலின் அட்டைப் படத்தில் ;திருவள்ளுவர் திருநீற்றுப் பூச்சோடு காணப்படுகிறார். இது வரவேற்கத் தக்கதல்ல. மேலும் பாடங்களில் சமயம் சம்பந்தமான கருத்துக்கள் உண்டு. பல சமயத்தவர்களும் இந்த நூலைக் கற்பதனால் இவைகளைத் தவிர்தல் வேண்டும்.
ஆறாந்தர பாடநூலில் செடி, கொடி, மரம், பறவை, மிருகம், ஈசல், கறையான் போன்றவற்;றை அடிப்படையாகக் கொண்ட பாடங்களே அதிகமாகக் காணப்படுகின்றன
ஒவ்வொரு பாடத்திலும் தரப்பட்டுள்ள ‘கிரகித்தல் பயிற்சி’ என்பதை கிரகித்தற் பயிற்சி என்றோ அல்லது கிரகித்தலுக்கான பயிற்சி என்றோ தரலாம்.
கலாநிதி கோணாலை கோணேசபிள்ளை
Former Faculty Member, National and International Universities

Mandur, Batticaloa
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்