எனது இணைப்பக்கத்துடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Published Date: February 16, 2014

மனச்சிதைவு

மனச்சிதைவு (Paranoia) என்பது ஒரு சிக்கலான, நுட்பமான மன நோயாகும். இப்பாதிப்புகுள்ளானவர்கள் தற்செயல் நிகழ்வுகளுக்கெல்லாம் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர். இல்லாதவையெல்லாம் இவர்களுக்கு இருப்பதுபோல் (delusional belief) தோன்றும்.
பொதுவான மனநல பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று அவர்களாகவே தனது பிரச்சனைகளை தெரிவிப்பதின் செய்திகளைக் கொண்டு அறிவது; மற்றது அவரது நெருங்கிய நபர் தரும் செய்திகளைக் கொண்டு அறிவது. மனச்சிதைவைப் பெரும்பாலான சமயங்களில் நெருங்கிய நபர் தரும் செய்திகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடிகிறது. மருத்துவமனையில் நேரடிக் கண்காணிப்பில் இதை மேலும் தெளிவாக உறுதி செய்து கொள்ள முடியும்.
மனச்சிதைவை அடையாளங்காண பல்வேறு வகை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைபடுத்தபட்டுள்ளன. ஆனாலும் எந்தவொரு தனி அறிகுறியையும் வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது. பல சமயங்களில் சில குறைகள் கலாச்சார சூழ்நிலை, கல்வி, வயது போன்ற பலவித வித்தியாசமான வேறுபாடுகளின் காரணமாக கூட இருக்கலாம். எந்தவொரு அறிகுறியும் வேறு வகை மனநல பாதிப்பு அல்லது உடல்நல பாதிப்பின் காரணமாக இருக்கலாம். எனவே மனச்சிதைவு நோய்தான் என்று இறுதியாக உறுதியாக முடிவெடிப்பது சுலபமல்ல.
பாதிக்கபட்டவரது அறிகுறிகளும் மற்ற நெருங்கிய நபரின் கருத்துகளும், மருத்துவரது நேரடி கண்காணிப்பும், காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடும். கிட்டதட்ட ஒரு குற்றவாளியின் வழக்கில் நிதானமாக எடுக்கப்படும் தெளிவான தீர்ப்பை போல பல அறிகுறிகளின் தொகுப்பைக் கொண்டு மனசிதைவு நோய் என்று உறுதியாக தீர்மானிக்கபடுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு வருகிறார் என்பதைப் பொறுத்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சரியான சிகிச்சை முறைகளை பொறுத்தும் இந்நோய் முழுமையான தீவிரமான கட்டத்தை அடையாமல் நோயால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முடியும்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like On Facebook

    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    விளம்பரம்