பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு என்பார்கள்.பத்து மாத கால சுமை உடலுக்கு மற்றுமின்றி மனதுக்கும் பல வித சோர்வை உன்டாக்குகிறது. அதிலும் பிரசவத்தால் ஏற்படும் வலிகள்,உடல் மாற்றங்கள் பிரசவத்திற்கு பின் புயல் வந்து ஓய்ந்தது போல உடல் மற்றும் மன சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் திடீர் உடல் ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படும்.அதை விட குழந்தையால் உறக்கம் கலைவதுபால் கொடுப்பது போன்ற சில பிரச்சனைகள் மனநல பாதிப்புக்களை ஏற்படும். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அனுசரித்து போக முடியாதது,பொருளாதார சூழ்நிலைகள் போன்ற மற்ற காரணங்களும் மன சோர்வுக்கு காரனமாகின்றன.கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பிரச்சனைகள்,வேலைக்கு போகும் பெண்கள் பிரச்சனைகள் போன்ற சில காரணங்களும் பிரசவ பின் கால மன சோர்வுக்கு வித்திடுகின்றன. பெரும்பாலானோர்பிரசவத்திற்குபின்ஏற்படும்உறக்கமின்மை,உடல்சோர்வு,பசியின்மை,மனசோர்வு,சோகம்,துக்கம் போன்ற பல உபாதைகள் பச்சை உடம்பு காலப்போக்கில் சரியாகும் என விட்டு விடுகிறார்கள்.
ஆனால் சிலருக்கு ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை மனசோர்வின் அறிகுறிகள் நீடிக்கலாம் வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் வேலைக்கு போக முடியாமல் அவஸ்தை படுவார்கள்.ஆனால் அவர்களுடைய திறமைகளும்,வாழ்க்கைதரமும் ப்ப்பட வாய்ப்புள்ளது.